கர்ம பலனை அளிக்கும் சாயாபுத்திரன் சனி
சனியால் கெட்டவர்கள் யாரும்இல்லை சனி யாரையும் கெடுப்பதில்லை செய்த செயலுக்கு தக்கபடி பாகுபாடின்றி பலனை தருவதில் சனிக்கு நிகர் சனியே அதனால்தான் சனி கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார்
இப்பிறவி எடுத்ததற்கான கர்மா முழுமையாக முடியும்வரை ஆயுளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர் சனியே எங்கெல்லாம் பொதுமக்கள் கூடியிருக்கிறார்களோ அங்கெல்லாம் சனியின்ஆதிக்கம் அதிகம் பொதுமக்களின் நல் ஆதரவை பெற்று வாழ்பவர்களுக்கு சனியின் அருள் தானாககிடைக்கும்
சனியை ஒரு தபால்காரருடன் ஒப்பிடலாம் அவர் தபாலை நமக்கு வழங்குவார் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவருக்கே தெரியாது அந்த தபால்தான் நம் கர்மவினை
உத்தியோகம் சுய தொழில் இவைகளுக்கு காரணமாக இருப்பவர் சனி அதனால்தான் இவருக்கு ஜீவனகாரன் என்ற பெயரும் உண்டு சனியின் பரிபூரண அருளை பெற்றவர்கள் உயரிய பதவிகளையும் நிலைத்த மரியாதையுடன் வாழ்வார்கள் ஆனால் சனியின் பரிபூரண அருளை பெறாதவர்கள் உத்தியோக தடை தொழில் தடை அவமானம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் கர்மத்தை கற்றுத் தருபவர் சனி சனி பகைவர் அல்ல அவர் ஒரு ஆசான் அவர் ஒரு தந்தை
சனியை வழிபடுவோம் நன்மையை அடைவோம் #ஆன்மீகம்


