படைப்பு கடவுளான பிரமாவுக்கே பாடம் புகட்டியதலம் சிவபெருமானை போலவே ஐந்து முகங்களுடன் முருகன் அருள் பாலிக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம் இரும்பாறையில் உள்ள ஓதிமலை ஆண்டவர் கோயில்
பிரம்மனை சிறையிலிட்ட முருகன் சிவபெருமானின் மகனான முருகப்பெருமானிடம் பிரம்மதேவன் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்தால் இதனால் கோபம் குற்ற முருகன் பிரம்மனின் தலையில் கொட்டி சிறையில் அடைத்தார் பின்னர் சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்மனை விடுவித்து தந்தைக்கு பிரணவ மந்திரத்தை ஓதிய இடமே இந்த ஓதிமலை
பொதுவாக முருகன் ஒருமுகம் அல்லது ஆறுமுகங்களுடன் காட்சி அளிப்பார் ஆனால் இந்த தலத்தில் சிவபெருமானின் ஐந்து முகங்களை போலவே ஐந்து முகங்களுடன் எட்டு களங்களுடன் முருகன் காட்சி அளிக்கிறார் இது ஒரு அரிதான கோலமாகும்
முருகனிடம் பிரம்மனே விடிவிக்க சொல்லி சிவபெருமான் மட்டும் தனியாக வந்ததால் மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் அம்பிகைக்கு சன்னதி இல்லை அம்பிகை இல்லாத சிவத்தலம் என்று அழைக்கப்படுகிறது
சித்தர் போகர் பழனிக்கு செல்லும் வழியில் இத்தலத்தில் தங்கி யாகம் வளத்துள்ளார் அவர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல் என்றும் இன்றும் வெண்ணிறமாக காணப்படுகிறது தீராத நோய்கள் தீர்க்கும் இந்த வெண்மணல் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது
பக்தர்கள் புதிய தொழில் தொடங்க அல்லது சுப காரியங்கள் செய்ய நினைத்தால் முருகனின் பாதத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு பூக்களை வைத்து உத்தரவு கேட்கிறார்கள் முருகன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அந்த காரியத்தை செய்வார்கள்
கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் புஞ்சை புளியம்பட்டி பாதையில் இரும்பறை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது மலை உச்சியில் முருகனை தரிசிக்கலாம்
திங்கள் வெள்ளி சஷ்டி கிருத்திகை மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமே நடை திறந்திருக்கும் #ஆன்மீகம்


