ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனமான அத்துமீறல்! தமிழகமே தலைகுனியும் அவலம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு வயதுப் பிஞ்சுப் பாலகி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து, கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தக் கொடிய குற்றத்தைச் செய்த நபர், ஆளுங்கட்சியான திமுக-வின் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்த 'பெரியநாயகம்' என்பதுதான் மிகுந்த வேதனைக்குரியது. 'ஆளுங்கட்சிப் பின்னணி இருந்தால் எதையும் செய்யலாம், யாரைக் கொன்றாலும் தப்பித்துவிடலாம்' என்கிற மமதை கலந்த துணிச்சல் இத்தகைய கயவர்களுக்கு எப்படி வந்தது?
அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்களே இத்தகைய இழிவான, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் செத்துவிட்டதையே பறைசாற்றுகிறது.
திமுக தொடர்பில் இருந்தால் எதையும் செய்யலாமா? எத்தனையோ போராட்டங்கள், சட்டங்கள் வந்த பின்பும், ஒரு பச்சிளம் குழந்தையைச் சிதைக்க இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வருகிறது? இது வெறும் குற்றமல்ல; மனித இனத்திற்கே ஏற்பட்ட ஒரு தீராத கறை. இத்தகைய கொடூரம் நடந்திருப்பது, ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குச் சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எள்ளளவும் பயமில்லை என்பதையே அப்பட்டமாகக் காட்டுகிறது.
இந்த வழக்கை உடனடியாக விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து, எவ்வித அரசியல் சலுகையோ அல்லது காலதாமதமோ இன்றி, அந்தக் கயவனுக்கு உச்சபட்சத் தண்டனையை அரசு உறுதி செய்ய வேண்டும். #Thalapathy vijay anna


