#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் காலை ஜெபம்*
"வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்".
(திருப்பாடல் 95: 1-2. 6-9)
என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு. ஆற்றல் அனைத்தும் கொண்ட, என்னைப் படைத்தவரை புகழ்ந்திடு. அதிகாலையில் என்னை தட்டி எழுப்பும் என் அன்பரை வணங்கிடு. ஆறுதல் அளித்து அரவணைக்கும் என் தந்தையை வாழ்த்திடு.
அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில், நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறேன். துதிக்கிறேன். ஆராதிக்கின்றேன்.
இறைவா, எங்களுக்கு இன்று நீர் அளித்த, இந்த ஓய்வு நாளை ஆசிர்வதியும்! இன்றையத் திருப்பலியில், உமது இறைவார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்க, தியானிக்க, அதன்படி நடக்க ஏற்ற சூழலை உருவாக்கியருளும்.
திருப்பலியில், இன்று நான் மனம் ஒருமித்து பங்கு கொள்ளவும், உமது வார்த்தைகள் என்னுள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆசீர்வதிப்பீராக.
இயேசுவே! இன்று திருப்பலியில் உமது திருவுடலை பெறும் கிறித்துவர்கள் அனைவருக்கும் நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும்.
இறைவா, இன்றைய ஓய்வு நாளை நான் உமக்கு உகந்த முறையில் கழிக்கவும், உம் அன்பை பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவியாக விளங்கவும் அருள்புரிவீராக!
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணுலகில் இருக்கிற ... (1)
அருள் நிறைந்த... (3)
பிதாவுக்கும், சுதனுக்கும்..(1)
*ஆமென்.*


