#நல்லதே பேசு நல்லதே நினை தாலுக்கா அலுவலக பின்கேட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை – வட்டாட்சியரிடம் மனு
திண்டிவனம், மார்ச் 6:
புதிதாக பொறுப்பேற்றுள்ள திண்டிவனம் வட்டாட்சியாளர் திரு ஏழுமலை அவர்களை, முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் நேரில் சந்தித்து சாவு அணிவித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், திண்டிவனத்தில் ரூ.4.75 கோடி மதிப்பில் புதிய தாலுக்கா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அலுவலகத்தின் முன்புறத்தில் பிரதான வாசல் மற்றும் பின்புறத்தில் இரும்புக் கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்புறத்தில் உள்ள இரும்புக் கேட் கடந்த சுமார் ஆறு மாதங்களாக பூட்டப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முன்புற நுழைவாயிலை பயன்படுத்தி வரவும் செல்லவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் சூழல் நிலவுகிறது.
எனவே பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பின்புற கேட்டை இருசக்கர வாகனங்கள் நுழையாத வகையில் தேவையான ஒழுங்குமுறை ஏற்பாடுகள் செய்து, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது மாநில மகளிரணி அமைப்பாளர் பா. சிராஜ் பேகம், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் மு. அப்துல் ஹக்கீம், நகர செயலாளர் அ. தாவுத் அலி, நகர மகளிரணி அமைப்பாளர் இ. ஷர்மிளா, விழுப்புரம் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜை. ஆயிஷா பேகம், நகரத் தலைவர் அ. முஹம்மத் சாதிக், நகர துணை செயலாளர் அ. சேக் தாவுத், நகர துணைத் தலைவர் இ. சர்தார் அஹமத், நகர இளைஞரணி தலைவர் இ. நிசார் அஹமத், நகர இளைஞரணி செயலாளர் இ. அசேன் அஹமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


