ShareChat
click to see wallet page
search
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்* பாகம்-3 குகையில் தோன்றிய மாது பேசவில்லை பெர்னதெத்தைப் பரவசத்தில் ஆழ்த்திய அந்த மாது செபமாலை செபித்து முடிந்ததும் புன்முறுவல் பூத்து தலையை சாய்த்தபடி மெதுவாக மறைந்து சென்றார். எவ்வித உரையாடலும் நடைபெறவில்லை. பெர்னதெத் கெபியின் அருகில் ஒரு பாறையில் அமர்ந்து தனது கால் உறைகளை சரி செய்து கொண் டிருந்தாள். அருகில் வந்த இருவரையும் பார்த்து, "நீங்கள் எதையாவது பார்த்தீர்களா?" என்று கேட்டாள். “நாங்கள் எதையும் பார்க்கவில்லையே” என்று கூறியபடி அவர்கள் பெர்னதெத்துடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். பெர்னதெத் மௌனமாக, மெதுவாக நடந்தாள், "பெர்னதெத், எதையாவது பார்த்தீர்களா என்று கேட்டாயே, நீ எதையும் பார்த்தாயா?" என்று கேட்டாள் ஜேன் அபதி, "சும்மா கேட்டேன்" என்று பதில் கூறி விட்டு அமைதியாக நடந்தாள் பெர்னதெத் "முழந்தாளிலிருந்து வெகு நேரம் செபித்துக் கொண்டிருந்தாயே பெர்னதெத், என்ன அப்படி?" என்றாள் அந்துவானெத், “கோவிலில் மட்டும்தான் செபிக்க வேண்டுமா? எங்கேயும் செபிக்கலாமே" என்று சொன்னாள் பெர்னதெத், "ஏதோ ஒரு இரகசியம் இருக்கு, எங்களிடம் சொன்னால் என்ன?" என்று கூறி இருவரும் பெர்னதெத்தின் அருகில் வந்து நின்றனர். ஊருக்கு அருகில் வந்ததும், நடந்ததையெல்லாம் அவர்களிடம் சொல்லி விட வேண்டும் போல் தோன்றியது பெர்னதெத்துக்கு, *சரி, உங்களுக்குச் சொல்கிறேன். வேறு யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று வாக்குறுதி தருவீர்களா?” என்றாள் பெர்னதெத். அவர்கள் வாக்குறுதியளித்தனர். மூவரும் ஒரு ஒதுக்கமான இடத்தில் போய் நின்றார்கள். பெர்னதெத் சொல்லத் தொடங்கினாள். “மசாபியேல் குன்றின் மேலே உள்ள குகையில் அழகான இளம் மாதுவைக் கண்டேன். அவரைப் போல் அழகான ஒரு அம்மாவை இது வரை நான் கண்டதில்லை. அவர்களைச் சுற்றி சூரியனைப் போன்ற ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்களை நான் நன்றாகப் பார்க்க முடிந்தது, அந்த அம்மாவும் என்னை நன்றாகப் பார்த்தார்கள். நான் அவர்களுடன் செபமாலை செபித்தேன், மிக இளமையாகத் தோன்றினார்கள். வெள்ளை உடை அணிந்திருந்தார்கள். தலையில் வெள்ளை முக்காடு அணிந்திருந்தார்கள். இடுப்பில் நீல நிறக் கச்சை கட்டியிருந்தார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் பிரகாசமான ஒளி சூழ்ந்திருந்தது. அவர்களுடைய வலது கரத்தில், மணிக்கட்டுக்குக் கீழே வெள்ளை மணிகளாலான ஒரு செபமாலை தொங்கியது. செபமாலையில் தொங்கிய சிறு பாடுபட்ட சிலுவை பொன்னிறமாக மின்னியது. பாதங்களில் காலணிகள் அணியவில்லை. இரு பாதங்களிலும் தங்க நிறமான ஒரு ரோசா மலர் பதிந்திருந்தது..." பெர்னதெத் பேசி முடித்ததும், "இது நல்ல கதையா இருக்கே... என்றாள் ஜேன் அபதி ஏளனப் பார்வையுடன், பெர்னதெத் அவள் அருகில் நெருங்கி வந்து, யாரிடமும் சொல்லாதே வாக்குறுதியை மறந்து விடாதே" என்றாள். தொடர்ந்து இனைந்திருங்கள்..... ஆமென். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat