ShareChat
click to see wallet page
search
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். சங்கீதம் 49:1 பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். சங்கீதம் 49:2 என் வாய் ஞானத்தைப் பேசும், என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். சங்கீதம் 49:3 என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். சங்கீதம் 49:4 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன? சங்கீதம் 49:5 தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, சங்கீதம் 49:6 ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, சங்கீதம் 49:7 எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. சங்கீதம் 49:8 அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது, அது ஒரு போதும் முடியாது. சங்கீதம் 49:9 ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். சங்கீதம் 49:10 தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். சங்கீதம் 49:11 ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை. அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். சங்கீதம் 49:12 இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம், ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.) சங்கீதம் 49:13 ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள், மரணம் அவர்களை மேய்ந்துபோடும், செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள், அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். சங்கீதம் 49:14 ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.) சங்கீதம் 49:15 ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. சங்கீதம் 49:16 அவன் மரிக்கும்போது, ஒன்றும் கொண்டுபோவதில்லை, அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. சங்கீதம் 49:17 அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், சங்கீதம் 49:18 அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். சங்கீதம் 49:19 கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். சங்கீதம் 49:20 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு www.bible2all.com
✝பிரார்த்தனை - ShareChat
Tamil Bible (தமிழ் பைபிள்) - Apps on Google Play
Tamil Bible (தமிழ் பைபிள்) offline loaded with rich features enhancing users