ShareChat
click to see wallet page
search
#✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை". (திருப்பாடல் 51: 1-2. 10-11. 16-17) தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தவரே! உறுதி தரும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியவரே! புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே எழுப்பியவரே! உம்மை வாழ்த்தி, வணங்கி, போற்றி, ஆராதனை செய்கிறேன். இறைவா! இந்த தவக்காலத்தில், நாங்கள் பிறருக்கு அதிக அளவில் உதவிகள் செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு அருள்வீராக. மேலும், கனிவான பார்வை, அன்பான புன்னகை, ஆறுதல் அளிக்கும் வார்த்தை, இவைகள் மட்டுமே எங்களிடமிருந்து பிறருக்கு வெளிப்பட வேண்டுகிறேன். ஆண்டவரே! அன்று நினிவே நகர மக்கள் தங்கள் பாவங்களுக்கு மனம்வருந்தி, உம்மிடம் மன்னிப்பை இரந்தது போல இன்று, இவ்வுலக மக்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து, உம்மிடம் மன்னிப்பை இரந்து, தங்களையே சுத்திகரித்துக் கொள்ள அருள் புரிவீராக. தந்தையே! தங்கள் தவறுகளை இதுவரை உணராது, பாவங்களில் உழலும் மனிதர்களுக்காக வேண்டுகிறோம். இந்த தவக்காலத்தில் அம்மனிதர்களின் இதயங்களை தொட்டு, அவர்களது பாவங்களை உணர்த்தியருளும். இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*
✝பிரார்த்தனை - 0 0 - ShareChat