#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏ஏகாதசி🕉️ #🌙சந்திர தரிசனம்🔯 மகிமாலீஸ்வரர் தரிசனம்*
தேவாரம்
வரும் பழி வாராமே தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
சுரும்புடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண்ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே ! ,
- ஆலால சுந்தரர்
பொருள் :
வண்டுகளையுடைய கொன்றை மலர் மாலையையும் ,பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே ! அரும்புகளையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும், பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே ! நீயன்றோ,
எனக்கு வருதற்பாலதாய பழி வராமல் தடுத்து,என்னை ஆட்கொண்டாய் !! ,
இன்று,
*தேய்பிறை அஷ்டமி*
*சோமவாரம்*
திங்கள் கிழமை !


