புதுக்கோட்டை நகரில் உள்ள திருகோகர்ணம் பிரகதாம்பாள் ஆலய வளகத்தில் வீற்றிருக்கும் அரைக்காசு அம்மன் பக்தர்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு சக்தியாக திகழ்கிறாள்
காலத்தில் இந்த பகுதியை ஆண்ட சமஸ்தான மன்னர்கள் தங்களின் பொருள்கள் தொலைந்து போனால் அம்மனை வேண்டிக் கொள்வார்களாம் பொருள் கிடைத்தவுடன் அந்த காலத்து நாணயமான அரை காசு அம்மன் உருவம் போதித்த நாணயத்தை காணிக்கையாக செலுத்தியதால் இப்பெயர் பெற்றது
கோ என்றால் பசு கர்ணம் என்றால் காது காமதேனு பசு தனது சாப விமோசன பெற தனது காதுகளில் கங்கை நீர் சுமந்து வந்து இத்தால இறைவனை வழிபட்டதால்
திருக்கோகர்ணம் என பெயர் பெற்றது
சத்தியத்தை காப்பாற்ற புலியிடமே இறையாக செல்ல துணிந்த காமதேனுவின் பக்தியை கண்டு இறைவன் காட்சி தந்த இடம்
இன்றும் கூட நகை பணம் நில ஆவணங்கள் அல்லது வீட்டு சாவி எது தொலைந்தாலும் இந்த அம்மனை வேண்டினால் அது கிடைத்துவிடும் என்பது ஐதீகம்
வேண்டுதல் நிறைவேறிய பின்னர் அம்மனுக்கு வெள்ளம் கலந்த பச்சரிசி மாவிளக்கு படைத்து பக்தர்கள் தங்கள் நன்றியை செலுத்துகிறார்கள்
மன அமைதிக்கும் நம்பிக்கைக்கும் இழந்த பொருள் பெறுவதற்கும் இத்தலம் மிக சிறந்த இடம் இத்தலத்திற்கு சென்று வழிபட
அம்மனின் அருள் கிடைக்கும் #இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்


