*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்*
~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ்
பாகம்-7
இரண்டாவது காட்சி
அன்று பெப்ருவரி மாதம் 14-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருப்பலி பூசை முடிந்ததும் பத்துப் பன்னீரண்டு பிள்ளைகள் சூழ பெர்னதெத் குகைக்கு வந்தாள். செபமாலை செபிக்கத் தொடங்கினாள். "அதோ அம்மா வந்து விட்டார்கள்" என்று உணர்ச்சி வசப்பட்டு உரத்த குரலில் சொன்னாள் பெர்னதெத், தீர்த்தத்தைத் தெளித்தாள். அம்மா புன்னகை பூத்தார். பிரகாசம் அவரைச் சுற்றிச் சூழ்ந்து நின்றது.
பெர்னதெத் தரையில் முகங்குப்புற வீழ்ந்து வணங்கி "அருள் நிறைந்த மரியாயே.." என்று செபமாலை செபத்தைத் தொடங்கியதும் பரவசத்தில் ஆழ்ந்தாள். ஒரு மணி நேரம் நீடித்தது. குகையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "பெர்னதெத் ஒரு சம்மனசைப் போல் தோன்றுகிறாள்" எனப் பிள்ளைகள் பேசிக் கொண்டனர்.
முகம் வெளிறிப் போயிருந்தது. கண்கள் நன்றாக மூடியிருந்தன. சுரங்களைக் கூப்பியபடி இருந்தாள். விழிகளிலிருந்து கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தன!
அம்மா எதுவும் பேசாமல் முன்போல் அமைதியாக மறைந்து விட்டார்கள்.
மூன்றாவது காட்சி
அன்று பெப்ருவரி 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை. திருப்பலி பூசை முடிந்து சுமார் ஏழு மணிக்கு பெர்னதெந் கெபிக்குப் புறப்பட்டாள். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இரண்டு சீமாட்டிகள் அவளுடன் சென்றனர், பேனாவையும் பேப்பரையும் பெர்னதெத்திடம் கொடுத்தார்கள்,
முன்போல் பெர்னதெத் முழந்தாளிலிருந்து செபிக்கத் தொடங்கியதும் அம்மா குகையில் தோன்றினார்கள். நான் சொல்வதை நீ எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று புன்னகை பூத்தார்கள்.
சில வினாடிகளுக்குப் பின், அமைதியாக, இனிய தொனியில் “மகளே, பதினைந்து நாட்கள் தொடர்ந்து இதே இடத்திற்கு நீ அருள்கூர்ந்து வருவாயாம்மா?" என்று கனிவாகக் கேட்டார்கள்.
தன்னிடம் இவ்வாறு அந்த அம்மா(தேவமாதா) கெஞ்சிக் கேட்பதை எண்ணி பெர்னதெத் மெழுகுபோல் உருகினாள்.
"என் உள்ளமெல்லாம் நெகிழ்ந்தது. உள்ளத்தில் தெய்வீகமான ஒரு உவகை ஊற்றெடுத்துப் பொங்கி வழிந்தது.
நான் வணங்கி, "ஆம் அம்மா, நீங்கள் விரும்புவது போல் பதினைந்து தினங்கள் தவறாமல் வருவேன்" என வாக்குறுதி அளித்தேன். இதைக் கேட்டு மகிழ்ந்த அம்மா என்னிடம் சொன்னார்கள்.
"மகளே, உன்னை இந்த உலகத்தில் பாக்கியவதியாக ஆக்க மாட்டேன். ஆனால் மறுவுலகத்தில் உன்னைப் பாக்கியவதியாக ஆக்குவேன் என்று உளக்கு வாக்குறுதி தருகிறேன்.*
அருகில் இருந்த சீமாட்டியிடம் "அம்மா உங்களைப் பார்க்கிறார்கள்" என்றாள் பெர்னதெத் காட்சி மறைந்தது.
அன்னை நம் ஒவ்வொருவரையும் இதுபோல் உற்றுப் பார்க்கிறார்கள். துன்பத்திலும், துயரத்திலும், வேதனையிலும், பல சோதனைகளிலும் இந்த உலகில் அல்லல்பட்டு அழுது வருந்தும் நம் ஒவ்வொருவருக்கும் இதே வாக்குறுதியைத் தருகிறார்கள்.
துன்பங்கள் நம்மைத் தொடரும்போது, நம் இனிய தாயின் பாதங்களைப் பற்றிப் பிடிப்போம். அவர் தன் மகன் சேசுவிடம் நம்மை அழைத்துச் சென்று நம் துயர் துடைப்பார்கள்.
தொடர்ந்து இனைந்திருங்கள்.....
ஆமென்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்


