ShareChat
click to see wallet page
search
*சனிக்கிழமையும் அஷ்டமி திதியும் இணைந்த நன்னாளில் என்ன செய்தால் சிறப்பு.?* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒருவராவார். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். ☘️ தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்தால், நம்முடைய கடன் சுமை எல்லாம் தேய்ந்து போகும். வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்தால், நம் வாழ்க்கை வளம் பெறும். இதுதான் இந்த வழிபாட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம். ☘️ வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். ராகு காலத்தில் தான் வழிபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ☘️ தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபடுவதன் மூலம், கடந்த ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகள் கரையத் தொடங்கும். இந்த வழிபாட்டின் முடிவில் பணக்கஷ்டம் விலகி வருமானம் பெருகும். ☘️ சனி பகவானுக்கு, குருவாக திகழ்வர் காலபைரவர். சனிக்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் பைரவரை வழிபாடு செய்தால், நமக்கு சனியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். வளமான வாழ்க்கை அமையும். எனவே, இந்த நாளை நிச்சயம் நாம் தவறவிடக் கூடாது. ☘️ *சனீஸ்வரனும் பைரவரும்:* ☘️ கால பைரவர் எட்டு திசைகளையும் காத்து நம்மை வழிநடத்தும் காவல் தெய்வம் ஆவார். ☘️ ஸ்ரீ பைரவரே சனீஸ்வரனுக்கு வரம் அளித்து, அவரது கடமைகளைச் செய்ய வைத்த குரு ஆவார். ☘️ சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. ☘️ தன் சகோதரன் எமதர்மராஜா, பைரவரிடம் வணங்கி அதிக சக்தி பெற்றதைக் கண்ட சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையாக தவம் புரிந்தார். ☘️ சனீஸ்வரனின் தவ வலிமையால் பைரவர் அவர் முன் தோன்றி, நல்லது தீயது செய்யும் சக்தியை அளித்தார். அப்போது, யாரேனும் கஷ்டத்தில் இருந்தாலும், பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையே செய்ய வேண்டும் என்று பைரவர் சனீஸ்வரனிடம் சத்தியப்பிரமாணம் வாங்கினார். ☘️ *வழிபாட்டு முறைகள்:* ☘️ வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீ காலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடலாம். ☘️ வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து, அந்தக் காசுகளை தொழில்புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். ☘️ தொடர்ந்து ஆறு வாரங்கள் அல்லது 48 நாட்கள் விரதமிருந்து, தினமும் 108 முறை "ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவாய நமஹ" என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும். ☘️ ஸ்ரீ பைரவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தனலாபம், பயம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ☘️ இழந்த செல்வத்தை திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவதாகும். ☘️ சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். ☘️ அஷ்டமி திதியில் பைரவரை தொடர்ந்து வழிபட்டால் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் வந்து சேரும். லட்சுமி கடாட்சம் கிட்டும், செல்வ வளம் பெருகும், மனதில் புதிய உற்சாகம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், தைரியம் உண்டாகும். ☘️ நவகிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். ☘️ வறுமை நீங்க அஷ்டமி திதிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #📸பக்தி படம் #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - மார்கழி12 டிசம்பஸரீ 2 சனிக்கிழமையும் அஷ்டமி VSI திதியும்இணைந்தநன்னாளில் என்னசெய்தால்சிறப்பு? மார்கழி12 டிசம்பஸரீ 2 சனிக்கிழமையும் அஷ்டமி VSI திதியும்இணைந்தநன்னாளில் என்னசெய்தால்சிறப்பு? - ShareChat