
ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
#💐Happy Monday #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🙏அம்மன் துணை🔱 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #✨கடவுள் #💐வாழ்த்து #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #💐Happy Monday #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#☀️நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்🥵 *நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் சிவபெருமானுக்கு செய்யும் முக்கியமான வழிபாடு என்ன தெரிந்து கொள்வோம்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
கத்திரி நாட்களில் சிவபெருமானுக்கு
* பன்னீர்
* சந்தனம்
* இளநீர்
* ஜாதிக்காய்
* ஜாபத்திரி
* லவங்கம்
* பச்சை கற்பூரம்
* குங்குமபூ
* வெட்டிவேர்
* ஏலக்காய்
☘️
போன்ற வாசனை திரவிய பொருட்களை அருகில் உள்ள சிவாலயத்திற்கு வழங்கவும். தங்களால் முடிந்ததை முடிந்த அளவு.
☘️
இறைவன் அருளால் உஷ்ணம் குறைந்து மழை பொழிந்து நாட்டுமக்களும் நாமும் நண்மை அடைவோம்.
☘️
வசதி உள்ளார்கள் செம்பினால் ஆன தாரா பாத்திரம் சிவாலயங்களுக்கு வழங்கலாம்.
☘️
அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.
☘️
இந்த அக்னி நட்சத்திரம் நாளில் சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.
☘️
நாளை மே 04 ( திங்கட்கிழமை ) அக்கினி நட்சத்திர காலம் தொடங்கும். மே-28ம் தேதிதான் அக்கினி நட்சத்திரம் நிவர்த்தியாகும். இந்த இடைப்பட்ட நாட்களில் வெயில் வாட்டி வதைத்து விடும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதுபோல நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு. இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
☘️
அதாவது சூரிய பகவான் 20 டிகிரியில் இருந்து 43 டிகிரி வரை பயணிக்கும் காலமாகும். இந்த காலக் கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
☘️
அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.
☘️
இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
☘️
எனவே அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.
தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும். இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
☘️
அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார்.
☘️
ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவ பெருமான் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டேv இருக்கும். அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள்.
☘️
சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார். சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும். இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.
☘️
பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள். ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும்போது சிவபெருமான் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட உண்மை.
☘️
தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தன விருத்தி ஏற்படும். நோய்கள் நீங்கும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் sகெட்ட சக்திகள் நம்மை அணுகாது. தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும்.
☘️
தாராபிஷேகம் தவிர பொதுவாக சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் குணமாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் முக்தி பெறலாம்.
☘️
இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என சிவ ஆகமங்களில் ரிஷிகளினால் கூறப்பட்டுள்ளது.
☘️
1, அருகம்புல் தண்ணீரால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.
☘️
2, நல்லெண்ணை அபிஷேகத்தினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
☘️
3, பசும்பால் அபிஷேகத்தினால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.
☘️
4, தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம் கிடைக்கும்.
☘️
5, பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.
☘️
6, சர்க்கரை அபிஷேகம் துக்கத்தை போக்கும்.
☘️
7, புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் லாபம் வரும்.
☘️
8, இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும்.
☘️
8, ருத்ராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.
☘️
9, அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
☘️
10, வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.
☘️
11, அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.
☘️
12, திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.
☘️
13, பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.
☘️
14, நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும்.
☘️
15, மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.
☘️
16, மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.
☘️
17, எலுமிச்ச பழ தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆத்மஞானம் உண்டாகும்.
☘️
18, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் மன தைரியம் பெறலாம்.
☘️
அக்கினி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியானm ஒரு நாளில் சிவபெருமானுக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம்.
☘️
அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக மதியம் தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைப்பதும் வழக்கத்தில் உள்ளது.
☘️
அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு மட்டுமின்றி வறுமையில் வாடும் அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.
☘️
ஒரே ஒரு சிவனடியாருக்கு அக்கினி வெயிலை சமாளிக்க நீங்கள் குடை வாங்கி கொடுக்கலாம். கதராடை, செருப்பு, விசிறி போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். சிவனடியார்கள் மனம் குளிர்ச்சி அடைந்தால் சிவபெருமானும்
மனம் குளிர்ந்து உங்களை ஆசிர்வதிப்பார். #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
#🤩Sunday Special💥 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #📸பக்தி படம் #✨கடவுள் #💐வாழ்த்து
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#📸பக்தி படம் #✨கடவுள் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #💐வாழ்த்து #🌻வாழ்த்துக்கள்💐
#🤩Sunday Special💥 #🌻வாழ்த்துக்கள்💐 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #💐வாழ்த்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞












