ShareChat
click to see wallet page
search
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *________﷽________* *السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ* *இறைவனின் சாந்தியும், கருணையும், உங்கள் மீது உண்டாவதாக.......* *بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان* *امين امين يارب العالمين!* 💖💖💖💖💖💖💖💖💖 *இனிய இரவு வாழ்த்துகள்!* *╔═══🌻⊰⊱⊰🌹⊱⊰⊱⁶🌻═══╗* *'’தர்மமும், பேரமும்!’’* ✶⊶⊷⊶⊷❍⊶⊷⊶⊷✶❍⊶⊶⊷⊶⊷❍ செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுக் கொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள். "ஒரு கட்டு கீரை என்ன விலை....?" "ஓரணாம்மா" "ஓரணாவா....? அரையணா தான் தருவேன். நாலு கட்டு கொடுத்திட்டு போ" "இல்லம்மா வராதும்மா". "அதெல்லாம் முடியாது. அரையணா தான்". பேரம் பேசுகிறாள் அந்தத் தாய். பேரத்திற்கு ஒத்துக் கொள்ளாத அந்தப் பெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்று விட்டு... "மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்றாள். "முடியவே முடியாது. கட்டுக்கு அரையணா தான் தருவேன்".. என்று பிடிவாதம் பிடித்தாள். கீரைக்காரி சிறிது யோசனைக்குப் பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறி விட்டு நாலு கட்டுக் கீரையை கொடுத்து விட்டு ரெண்டணா காசை வாங்கிக் கொண்டு கூடையைத் தூக்கி தலையில் வைக்கப் போகும் போது கீழே சரிந்தாள். "என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலயா...?" என்று அந்தத் தாய் கேட்க "இல்லம்மா போய் தான் கஞ்சி காய்ச்சணும்" "சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறி விட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும் போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். "இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த தாயினுடைய மகன் " ஏம்மா அரையணாவுக்குப் பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக் கூட ஆறு இட்லிக்கு மூன்றணா வருதும்மா? என்று கேட்க, அதற்கு அந்தத் தாய், "வியாபாரத்துல தர்மம் பார்க்கக் கூடாது, தர்மத்துல கணக்கு பார்க்கக் கூடாதுப்பா" என்று கூறினாள்...! 💐 🌹 🌻 💐 🌹 🌻 💐 🌹 🌻 முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இன்று இரவு உறங்கி காலையில் சுபுஹுக்கு எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! இனிய கனவுகளுடன் இரவு இதமாகட்டும்... *இந்த இரவு இனிதாகட்டும்* தொகுப்பு... *S.S.ஷேக் ஆதம் தாவூதி* *No : 02 கடலங் குடி* *மயிலாடு துறை* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹