ShareChat
click to see wallet page
search
தீராத நோய்களை தீர்க்கும் வைத்திய வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு வீரராகவ பெருமாள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இத்தலத்து பெருமாள் நோய்களை தீர்க்கும் மருத்துவராக போற்றப்படுகிறார் தொடர்ந்து மூணு அமாவாசைகள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தீராத வயிற்று வலி கை கால் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம் உடலில் தேவையற்ற மருக்கள் கட்டிகள் இருப்பவர்கள் அவை மறைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிரகாரத்தில் உப்பு மற்றும் மிளகை சமர்ப்பிக்கிறார்கள் உப்பு கரைவது போல் நோய்களும் கரைந்து விடும் என்பது ஐதீகம் மூலவர் வீரராகவ பெருமாளுக்கு தண்ணீர் அல்லது பாலில் அபிஷேகம் கிடையாது சந்தன தைலம் மட்டுமே அபிஷேகம் ஆக நடைபெறுகிறது இக்கோயிலில் ஹிருதாபதனி தீர்த்தம் கங்கையை விட புனிதமாக கருதப்படுகிறது இதில் குளித்தால் மனக்கவலைகள் நீங்கும் என்பது ஐதீகம் பெருமாளுக்கு விசேஷமான கம்பளி அங்கு காணிக்கை இங்கே பிரபலம் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காலை ஆறு மணி முதல் 12 மணி வரை மாலை நாலு மணி முதல் 8 மணி வரை அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும் இந்த வைத்திய வீரராகவ பெருமாள் வழிபாடு சிறப்பாகும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - @reddiyur aanmigam பிணிதீர்க்கும்வைத்தியராக வீரராகவப் பெருமாள் மரு கட்டிகள் குணமடைய உப்பு மிளகு காணிக்கை! @reddiyur aanmigam பிணிதீர்க்கும்வைத்தியராக வீரராகவப் பெருமாள் மரு கட்டிகள் குணமடைய உப்பு மிளகு காணிக்கை! - ShareChat