#🤗🤗நல்லதே நினை நல்லதே நடக்கும்🙏🙏😌😌 திமுக முன்னாள் நிர்வாகியின் மகன் திருமண அழைப்பிதழ் – முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் தலைவரிடம் வழங்கல்
விழுப்புரம் ஜன-08
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட கழக துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கோ.அசோகன் – ஹேமலதா தம்பதியரின் மூத்த குமரன் டாக்டர் அ.விக்னேஷ் என்பவருக்கு வருகிற 8.2.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, கடந்த 7.1.2025 அன்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்களை நேரில் சந்தித்து, தனது மகனின் திருமண அழைப்பிதழை கோ.அசோகன் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, திண்டிவனம் முன்னாள் திமுக 27வது வார்டு செயலாளர் மோகன் உடன் இருந்தார். சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.


