ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== வீசுபுக ழீசுரரே விரித்துரைக்க நீர்கேளும் என்னையுமோ கீழுலகில் இறந்துகிடந் தாரெனவே சொன்னவரை யெல்லாம் சுறுக்காகத் தானழையும் என்றந்த மாயவனார் இப்படியே சொன்னவுடன் அன்றந்த ஈசுரனார் அழைத்தா ரவர்களையும் உடனேதான் தேவர்முனி ஒக்கப் பயமடைந்து தடதடென ஓடிவந்து தாழ்ந்துநமஸ் காரமிட்டு அப்போது மாயவனார் அவர்கள் தமைப்பார்த்துச் செப்புகிறா ரையா திருக்கண் பொறிபறக்கக் கண்கள் சிவந்து கருமேனி தான்விறைத்து விண்க ளதிர வெடுவெடெனக் கோபமுற்றுத் தேவர் திணுக்கிடவே தெய்வமுனி தான்பதற மூவர் திணுக்கிடவே உரைக்கிறா ரெம்பெருமாள் மண்திண் ணெனவே மலைகள் பொடிபடவே திண்திண் ணெனவே தேவர் மிகப்பதறச் சிவனுங் கிடுகிடெனச் சிவனுமை யும்பதற நமனும் பதற நாரா யணருரைப்பார் . விளக்கம் ---------------- சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கிய மகாவிஷ்ணு சிவபெருமானைப் பார்த்துச் சொல்லுகிறார், எல்லா புகழுக்கும் சொந்தக்காரரான சிவபெருமானே, நான் இங்கே விளக்கமாகச் சொல்லுவதைச் சற்றுக் கவனமாகக் கேளுங்கள். . பிறப்பு இறப்பு விதிகளைக் கடந்து அவதாரம் பலபுரியும் என்னைக் கூட பூலோகத்தில் இறந்து கிடந்தார் என்று சொன்னவர்களையெல்லாம் உடனே இங்கே வரச்சொல்லுங்கள் என்றார். . மகாவிஷ்ணுவின் திருவுள்ளப்படி சிவபெருமான் அவர்களையெல்லாம் அங்கே வரவழைத்தார். தேவர்களும் முனிபுங்கவர்களும் மிக விரைவாகவும் பதற்றத்தோடும் ஓடோடி வந்து சிவபெருமானையும். மகாவிஷ்ணுவையும் தாழ்படிந்து வணங்கி நின்றார்கள். . அவர்களைக் கண்ட மகாவிஷ்ணுவின் கண்கள் கடுஞ் சினத்தால் செந்தழல்போல் சிவந்தன. அவருடைய கார் வண்ணத் திருமேனியோ அங்கம் அங்கமாக விறைத்துத் துடித்தன. அதனால் விண்ணகமும், மண்ணகமும் நிலைகுலைந்து போயிற்று, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானும், உமையவளும், எமனும், ஏனைய எல்லா வகைகளும் மலைகளும் அதிரும்படியாக மகாவிஷ்ணு கேள்விக் கணைகளைத் தொடுத்தார். . அகிலம் ======= தேவரே வானவரே தெய்வமுனி சாஸ்திரியே மூவரே நானும் ஒளித்ததெங்கே சொல்லுமென்றார் ஆளுக்கொரு மூப்பாய் அரியிங்கே யில்லையென்று கோளுரைத்த ரீசர் குருமுன்னே நீங்களெல்லாம் சாத்திரத்தைப் பார்த்துச் சரியாகச் சொன்னதிட்டச் சூத்திரத்தை யெல்லாம் சொல்லுமென்றா ரெம்பெருமாள் சொல்லநா வில்லாமல் சோர்ந்துமிகத் தேவரெல்லாம் பல்வாய் சுண்டொல்கிப் பதைபதைத்து நின்றனரே கண்தலை கவிழ்ந்து கால்பேர்த்து வைக்காமல் விண்கவிழ்ந்த யோகமுனி வெட்கிநின்றா ரன்போரே நின்ற நிலையறிந்து நெடியபர மேசுரரும் அன்றெந் தனோடே அறம்பாடிச் சொன்னதெல்லாம் இன்றெங்கே போச்சுதுகாண் இரண்டும்மிகச் சொல்லாமல் நின்றிங்கே நீங்கள் நினைவயர்ந்து நிற்பதென்ன பேச்சுப்பே சுங்கிளிக்குப் பின்பூனை நாட்டமுற்றால் சீச்சுக்கீச் சென்றுகிளி கீழ்ப்பதுங்க வேண்டியதேன் அன்றுநீர் சொன்னமொழி அயர்த்துமிகப் போனதென்ன இன்றுநான் கண்டிலனே இதற்குமுன் னுள்ளதிறம் இப்படியே ஈசர் எடுத்துரைக்கத் தேவரெல்லாம் எப்படிநாம் சொல்வோம் என்றே திகைக்கலுற்றார் . விளக்கம் ---------------- தேவர்களே, வானவர்களே, தெய்வமுனி சாஸ்திரிகளே முப்பெரு மண்டலங்களைச் சார்ந்த நீங்கள் மூவரும் சொல்லுங்கள், நான் எங்கே ஒளித்திருந்தேன்? எந்த இடத்தில் சாகக் கிடந்தேன்? யாரிடமிருந்து தப்பிப்பதற்காக நான் ஒளிந்தேன்? அடுத்து பிறவி எடுப்பதற்காக நான் சாகக் கிடந்ததாகவும், செத்தே போய்விட்டதாகவும் சொன்னீர்களாமே அது எங்கே? சொல்லுங்கள். . ஆளுக்கொரு விதமாக அவரவர் சிந்தனைக்கு எட்டியவாறு கற்பனை செய்துகொண்டு, உங்கள் கற்பனையில் தோன்றியவற்றைத் தோன்றியவாறெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் மாயவனாகிய என்னையே இங்கு இல்லையென்று மகாதேவனாகிய நமது குரு சிவபெருமானிடத்திலே கோளுரைத்திருக்கிறீர்கள். நடவாத ஒன்றை நடந்ததாகத் கூறிக் குழப்பம் விளைவித்திருக்கிறீர்கள். அதைச் சாட்சி பூர்வமாகத் தெளிவுபடுத்துங்கள். அதாவது சாஸ்திரங்களைப் புரட்டிப்பார்த்து, அதல் எங்களுடைய பிறப்பு இறப்பு பற்றி என்ன விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை திட்டவட்டமாகச் சொல்லுங்கள் என்று மகாவிஷ்ணு கடுகடுத்த கோபத்தோடு அவர்களிடம் கேட்டார். . தேவர்களும், முனிவர்களும் தெய்வமுனி சாஸ்திரிகளும், வாய் திறந்து பதிலுரைக்கக் கதியற்றவர்களாய், பற்கள் பூண்டநிலையில் உதடுகளைப் பிறந்து வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாமல் பதைபதைத்து தலை குனிந்து நின்றார்கள். அவர்களின் நிலைமையை உணர்ந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, தேவர்களே, முனிவர்களே, தெய்வமுனி சாஸ்திரிகளே நீங்களெல்லாம் அன்று என்னிடம் உண்மையென, உறுதிபட ஓங்கி உரைத்த பேச்சுகளெல்லாம் இன்றெங்கே போச்சுது? இப்போது இங்கே மகாவிஷ்ணு கேட்கும் கேள்விகளுக்கு உண்டென்றோ, இல்லையென்றோ சொல்லாமல் நீங்கள் நிலை குலைந்து நிற்கிறீர்களே அது ஏன்? பேசிப் பழகிய கிளி பூனையைக் கண்டவுடன் மரண பயத்தால் இயல்பான அதன் சொந்த மொழியில் கீச்சுகீச்சென்ற சத்தத்துடன் மறைந்து பதுங்குவதைப் போன்று நீங்கள் தலைகுனிந்து நிற்பதற்குக் காரணம் என்ன? அன்று என்னிடம் ஆணித்திறமாக அடித்துச் சொன்னீர்களே, அதையே இன்றும் சொல்ல வேண்டியதுதானே என்று சிவபெருமானும் சற்று சினத்தோடு கேட்டார். அதனால் நிலை தாழ்ந்த தேவர்களும், வானவர்களும் தெய்வமுனி சாஸ்திரிகளும் தம் தவறை உணர்ந்து பதிலுரைக்க பலமில்லாமல் பதைபதைத்து நின்றார்கள். . . அகிலம் ------------- சிவன் திருமால் ஐக்கியம் ========================= எல்லா மறிந்து எடுத்துரைப்பா ரெம்பெருமாள் பொல்லாதார்க் கெல்லாம் பிறப்பொன் றிசைந்திருக்கு சொல்லுகிறேன் நானுமொன்று சொல்லுவதைக் கேட்பீரோ நல்லதுதா னென்று நாட்டமுற் றெல்லோரும் அப்போது எம்பெருமாள் ஆதிசிவ மோடுரைப்பார் இப்போது கேட்பீரோ யான்சொல்லும் நியாயமது என்றுதிரு மாலுரைக்க எடுத்துரைப்பா ரீசுரரும் மன்று தனையளந்த மாலேயென் மைத்துனரே வாரு மெனஅழைத்து மாலோன் தனையிருத்திச் சீருடனே வேதாவும் சிவனும் உமையாளும் எல்லோருங் கூடி இருந்தந்த மாயவரின் நல்லா யருகிருத்தி நவிலுவார் சத்தியமாய் இதற்குமுன் செய்த இழிவெல்லாம் நீர்பொறுத்துக் கதுக்காக வும்முடைய கருத்தின் படியாலே நடக்கும்படிச் சட்டமெல்லாம் நாரணர்க்குத் தந்தோங்காண் அடக்குடக் கெல்லாம் ஆதிக்குத் தந்தோங்காண் இன்றுமுத லும்முடைய இச்சைபோ லேநடத்தி என்றும் நடத்திக்கொள்ளும் என்றே விடைகொடுத்து சட்டமெல் லாமுமக்குத் தந்தோ மினிநீர்தான் இட்டசட்ட மீறி இனியொருவர் செய்யோங்காண் உம்மை நினையாமல் உக்கலியைச் செய்ததினால் நம்மை வரைநீர்தான் நடத்தும் படிநடத்தும் என்றந்த ஈசுரரும் ஏற்ற உமையாளும் அன்றந்த வேதாவும் அமரர்முனி தேவர்களும் சத்திய மாகத் தானுரைத்தார் நாரணர்க்கு . விளக்கம் ========= இந்நிலையில் எல்லாம் அறிந்த மகாவிஷ்ணு, அவர்களையெல்லாம் பார்த்து, பொய்யுரைத்த பொல்லாதவர்களுக்கெல்லாம் பூலோகத்தில் பிறப்பொன்று வரப்போகிறது. நான் இன்னுமொன்று சொல்லுகிறேன் அதையும் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அங்கிருந்தோரெல்லாம் மகாவிஷ்ணு என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கவனமாகக் கேட்க ஆவலாயினர். அப்போது மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பார்த்து, ஈசுரரே, நான் இங்கே எடுத்துரைக்கும் நியாயங்களைக் கவனமாக கேட்பீர்களா என்றார். . உடனே, சிவபெருமான், மகாவிஷ்ணுவைப் பார்த்து உலகளந்த பெருமானே ! என்னுடைய மைத்துனரே! என்று மகாவிஷ்வைத் தம் அருகில் அழைத்து அமரவைத்து, சிவன் விஷ்ணு பிரம்மா உமையவள் ஆகிய அனைவரும் ஒருமித்திருக்கும் நிலையில் ஓர் சத்தியப் பிரமாணம் செய்யலானார். . மாயோனே ! நாங்கள் இதற்கு முன்பு செய்த பிழைகளையெல்லாம் பொறுத்து, உம்முடைய விருப்பப்படி செயல்படுவதற்கான அனைத்து விதிமுறைகளையும் அடக்கங்களையும், அந்த அடக்கத்திலுள்ளேயிருக்கும் காரண காரிய முடிச்சுகளையும், ஆதிமூலமாகிய உம்மிடம் ஒப்படைத்துவிட்டோம். ஆகவே இன்று முதல் உம்முடைய விருப்பமில்லாமல் கலியைப் படைத்ததினால், இனி என்னோடு சேர்த்து எல்லாரையும் நீர்தான் வழிநடத்தவேண்டும் என்றனர். . . தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா /! லேயறுத்து கள்ள யுகத்தைக் காணாம உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி மாறிய தில்லாமல் வங்கிஷமுந் தானொழித்து வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய்த் தரும யுகமாய்த் தாரணிக்க மாயருளிப் பொறுமை மனுவாய்ப் பெரியசான் றோர்வழியை வைத்து ஆள முடிசூடிப் அன்பாக பண்பாக வேண்டும் பவிசு மிகவாக ! அகிலம் 03.02.2026 Muthn Praksh வீரத்தனமாய்  ருங்கோ விளக்கின் ஒளி போல் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா /! லேயறுத்து கள்ள யுகத்தைக் காணாம உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி மாறிய தில்லாமல் வங்கிஷமுந் தானொழித்து வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய்த் தரும யுகமாய்த் தாரணிக்க மாயருளிப் பொறுமை மனுவாய்ப் பெரியசான் றோர்வழியை வைத்து ஆள முடிசூடிப் அன்பாக பண்பாக வேண்டும் பவிசு மிகவாக ! அகிலம் 03.02.2026 Muthn Praksh வீரத்தனமாய்  ருங்கோ விளக்கின் ஒளி போல் - ShareChat