குறைந்தபட்ச இருப்பு (மினிமம் பாலன்ஸ்) இல்லாததற்காக அபராதம் வசூலித்துவரும் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்த ஒருவர் பாராட்டுக்குரியவர்.
பெங்களூருவில் தனியாக தொழில் நடத்திவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் Parameswaran Krishnayya அவர்கள், பாராளுமன்ற மனு குழுவை அணுகி, மினிமம் பாலன்ஸ் இல்லாததற்கான அபராத வசூலை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பெறச் செய்தார்.
கடந்த நிதியாண்டில் ₹4,817 கோடி அபராதமாக வசூலித்த வங்கிகளுக்கு இது பெரிய பின்னடைவாக அமைந்தது. சாதாரண மக்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியாக உள்ளது.
தனது ஊழியர்கள், “அக்கவுண்டில் பணம் அனுப்ப வேண்டாம்; மினிமம் பாலன்ஸ் இல்லையென்றால் அபராதம் பிடித்துவிடுவார்கள்” என்று கூறியபோதுதான், இந்த பிரச்சினையின் தீவிரத்தை அவர் உணர்ந்தார். அதற்கான தீர்வை காண முயற்சி எடுத்தார். அந்த முயற்சியின் பலன்தான் இன்று பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒருவருக்கு ஏராளமான செலவுகள் இருக்கும் — EMI கட்ட வேண்டும், மின்சார கட்டணம் செலுத்த வேண்டும், பல தேவைகள் இருக்கும். அவற்றை கணக்கிட்டு தான் அவர் தனது கணக்கில் பணம் வைத்திருப்பார். ஆனால் அதே சமயம் மினிமம் பாலன்ஸ் இல்லை என்ற காரணத்தால் அபராதம் பிடித்துக் கொள்வது எப்படி நியாயம்?
நாம் பயன்படுத்துவது நம்முடைய சொந்த பணம் தான்; வங்கியின் பணம் அல்ல. ஒருவரின் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு கூட இல்லாத நிலைமை ஏற்கனவே கடினமானது. அதற்குமேல் “உங்களிடம் பணம் இல்லை, அதனால் அபராதம் கட்ட வேண்டும்” என்று சொல்வது எவ்வளவு முரண்பாடானது!
இதையே தான் நான் கேள்வி எழுப்பினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மினிமம் பாலன்ஸ் இல்லாததற்காக அபராதம் வசூலிக்கக் கூடாது என்ற பாராளுமன்ற மனு குழுவின் பரிந்துரைக்கு பின்பு, நாட்டின் 6 பொதுத்துறை வங்கிகள் இந்த அபராத வசூலில் இருந்து பின்வாங்கியுள்ளன.
நாட்டின் சாதாரண மக்களுக்கு நிம்மதி அளித்த இந்த அனுமதியை பெற்றுத்தந்த பரமேஸ்வரன் சார் அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். ❤️🙏 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📺அரசியல் 360🔴

