*_ 🌹இனிய ஈசன்..._* எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
அன்பின் உறைவிடமான
பரமாத்மாவும் நீயே...!
அகோரியாய் வாழும்
சுடுகாட்டு பித்தனும் நீயே ..!
தாண்டவம் ஆடும்
சடையனும் நீயே ..!
தாள்பணிந்தாரை ஆட்கொள்ளும்
தலைவனும் நீயே...!
நாதியற்றவர்களின்
நாதனும் நீயே...!
நயவஞ்சகர்களின்
நரகனும் நீயே...!
பிட்டுக்கு மண் சுமந்த
பெருமாளும் நீயே...!
பிறையை தரித்தருளும்
பிறைசூடனும் நீயே..!
நெற்றிக் கண்ணைக் கொண்ட
ருத்திரனும் நீயே...!
தேவர்களுக்காக நஞ்சுண்ட
நீலகண்டனும் நீயே..!
சக்திக்கு சரிபாதி வழங்கிய
அர்த்தநாதீஸ்வரன் நீயே...!
சாம்பலில் குளிக்கும்
சாம்ப சிவனும் நீயே ...!
மானசீகமாக மனதில் நான்
வணங்கும் சுயம்பு லிங்கமும் நீயே..!
சிலையாய் நான் துதிக்கும்
நடராஜரும் நீயே..!
விதி விளையாடும் போது
மதியாய் வருவாய்..!
மதியும் தோற்கும் வேளை
கர்மவினைப் பயனையும் தருவாய்..!
உன்னை தொழுவோர்க்கு
மோட்சங்கள் உண்டு...!
உன்னால் பலருக்கு
சாபவிமோச்சனங்களும் உண்டு...!
பாவத்தை அழிக்கும் மாமுனியே..!
முக்திக்கு வழி வகுக்கும் உன் பணியே..!
அன்பே சிவனே - எம்
தாயுமானவன் நீயே...!..
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
00:20

