#sagasraNaamam.
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 227*
*🙏🙏 ஓம் சக்தி பராசக்தி🙏🙏*
*இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்*
*...மஹாமந்த்ரா...*
அனைத்து மந்திரங்களயும்விட உன்னதமான, உயர்ந்த மந்திரமானவள்
மஹாமந்த்ரா महामन्त्रा –
*விளக்கம்🙏*
"""""""""""""""""""""
🔱அன்னை தந்திர சாதனங்களில் கூறப்படும் சாதனங்கள் இயக்கும் மந்திரங்களாக இருப்பவள் அன்னை! மந்திரங்களின் ஒலி அதிர்வுகளுக்கு உலகில் பல அதிசயங்களை நிகழ்த்தும், வலிமையுண்டு. “ஓம்”, “ஶ்ரீ” போன்ற ஒலிகளும், அவற்றைத் தரும் அசைகளும் எல்லா சுலோகங்களிலும் வருவதைக் காண்கிறோம். பூஜைகளிலும் இவையே பெரும்பாலும் ஒவ்வொரு மந்திரத்தின் துவக்கத்தில் இருப்பதைக் காணலாம். பஞ்சாக்ஷரி, அஷ்டாக்ஷரி, பஞ்சதஶாக்ஷரி, ஷோடஶாக்ஷரி என்று ஐந்தாகவும், எட்டாகவும், பதினைந்தாகவும், பதினாறாகவும், அசைகளின் கூட்டால் மந்திரங்கள், ஏறக்குறைய 70 இலட்சம் மந்திரங்கள் இருந்தாலும், அவற்றுளெல்லாம் ஆகச் சிறந்தவைகளாக 24 அசைகளை உடைய காயத்ரி சொல்லப்படுகிறது. 204-வது மந்திரமாகச் சொல்லப்பட்ட ஸர்வமந்த்ர ஸ்வரூபிணியாக அன்னையே இருக்கிறாள். மஹாமந்திரமாக லலிதா ஸஹஸ்ரநாமமே துதித்துத் துவங்கும் ஸ்லோகத்தில், “ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மஹாமந்த்ரஸ்ய” என்று அவளை “மஹாமந்த்ரா” என்றே கூறித் துவங்குகிறது. எனவே எல்லாவற்றுக்கும் மேலான “மஹாமந்த்ரா”-வே அன்னைதான்.இதுவே அன்னையின் பெருமையை கூறும் 227 வது திருநாமம் ஆகும்....
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மங்கள ஸ்தோத்திரம் 27
तारिणि दुर्गसंसारसागरस्याचलोद्भवे ।
रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि .
தாரின்னி துர்கா-சம்சார-சாகரஸ்ய-ஆகலோ[அ-உ]த்பவே |
டூபம் தேஹி ஜெயம் தேஹி யசோ தேஹி விஸ்ஸோ ஜஹி ...
விளக்கம்🙏
""""""""""""""""""""""
மலையில் இருந்து பிறந்தவள் (அதாவது மலை அரசனின் மகள்) தேவி துர்காவிற்கு வணக்கம், மற்றும் சம்சாரம் (உலக இருப்பு) என்ற கடினமான கடலை கடக்க நமக்கு உதவுகிறது. ...
*🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா🌹🌹*
*🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி🙏🙏*
*🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱*
🟥🟢🟥🟢🟥🟢🟥🟢🟥🟢🟥🟥🟢🟥🟢🟥🟢🟥🟢🟥🟢🟥


