ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் "திரு அத்யயன தீர்த்த பரிபாலனம்"--பதிவு 2/2 🙏🌺🙏🌹🙏🌻🙏☘🙏💐🙏 இன்று(14/02/2026) மாசி மாதம், கிருஷ்ணபட்சம்,துவாதசியுடன் கூடிய திருநாள்.ஸ்ரீராமாநுஜரின் புனரவதார புருஷரான ஸ்ரீ மணவாள மாமுனிகள் பரமபதம் எய்திய திருநாள்.16-2-1444-' ருதிரோத்காரி ஆண்டில் இந்த நாளில் தான் பெரிய ஜீயரான மாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார். ஸ்ரீரங்கம் மணவாளமாமுனிகள் சந்நிதியில் நடைபெறும் திருஅத்யயன வைபவம்: 🌷🌻🌺🏵🌹🍁🍃 திருஅத்யயன நாளின் முதல்நாள் (நேற்று) இரவு 7 மணியளவில், திருவாய் மொழியில் முதல் இரண்டு பத்துகள் (இருநூறு பாசுரங்களை), பெரிய பெருமாள் அத்யாபகக் கோஷ்டியினர் சேவிக்கின்றனர். மாமுனிகளுக்கு,தோசை,வடை, சுண்டல் நைவேத்யம் ஆகி கோஷ்டிக்கும்/பக்தர்களு க்கும் விநியோகிக்கப் படுகிறது. இன்று காலை மீதமுள்ள எட்டு பத்துகளும் (800 பாசுரங்கள்) சேவிக்கப் படும்.அரங்கரின் பிரசாத ங்கள்/மரியாதைகள் மாமுனிகளு க்குச் சமர்ப்பிக்கப்படும்.பிரசாதம் கோஷ்டிக்கு விநியோகம் ஆன பின், திருவாய்மொழி சாற்றுமறை நடைபெறும். மாமுனிகளின் திருவடி களான பொன்னடியாம் செங்கமலப் போதுகள் கோஷ்டியார் சிரசில் வைத்து அருளப்படும்.பின்னர் அத்யாபகர்கள் திருமலை ஆழ்வார் (திருவாய்மொழிப் பிள்ளை) மண்டபத்துக்கு (கோவில் வளாகத்து க்குள் மாமுனிகள் சந்நிதிக்குப் பின்னால் உள்ளது.இங்கு எழுந்தருளி யிருந்து தான் மாமுனிகள் காலட்சேபம்/உபன்யாசம் செய்வார். இந்த மண்டபத்தில் இருந்தே மாமுனிகள் பரமபதம் எய்தினார்.) செல்வார்கள். அங்கு அவர்கள் கோவில் திருவாய்மொழி,இராமானுச நூற்றந்தாதி,உபதேசரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந் தாதி சேவிப்பார்கள். அதன்பின் மாமுனிகள் சந்நிதியில் சாற்றுமறை. அனைவருக்கும் தீர்த்தம், பொன்னடியாம் செங்கமலப் போதுகள்,தொட்டிப்பிரசாதம் (உப்பில்லாத/உப்பு குறைவான சிறதளவு தயிர் சேர்ததஅன்னம்-- மாமுனிகள் பெரும்பாலும்,இந்த சத்வமயமான அன்னத்தையே அமுது செய்வாராம்! ) சாதிக்கப்படும். மாமுனிகள் திருவரசு: 🥀🌳🌴🌱🪷 மாமுனிகளின் சரம திருமேனி, வடதிருக்காவேரிக் (கொள்ளிடம்) கரை, தவராசன் படுகையில் பள்ளிப் படுத்தப்படடது.(கொள்ளிடம் திருமங்கை ஆழ்வார்படித்துறை-- சென்னை நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் ரயில்வே கேட்டை ஒட்டி மேற்கில், இணைப்புச் சாலைக்குத் தெற்கில் உள்ளது). "மகிழாதி கேசவன் தன்னடிக்கீழாக" என்கிறபடியே,ஆதிகேசவப் பெருமாள் திருவடிகள் கீழாக அவர் திருவடி பிரியா வண்ணம், தவராசன் படுகையிலே,பொன்னித் தென் பாலிலே,எழுந்தருளப் பண்ண ஒருப்பட,அவ்வளவிலே,பூதேவியான வள்,முன்பு ஜனகராஜன் திருமகளை மடியிலே வைத்து,அணைத்துக் கொண்டு ஆதரித்தாற் போலே,அந்த மண்மகளான பிராட்டியும், மணவாள மாமுனியான இவரையும், மடியிலே எழுந்தருளப் பண்ணி வைத்துக்கொண்டு மகிழ, ஆளவந்தார்,எம்பெருமானாரைப் போலே,யதிஸம்ஸ்ஹார விதியடங்கச் செய்து,கனித்து வாழும்படி, திருப்பள்ளிப் படுத்தினார் கள்."(யதீந்த்ர ப்ரவண பிரபாவம்). ஆழ்வார்/ஆசார்யர்கள் சரம திருமேனி பள்ளிப் படுத்தப்பட்ட இடம் 'திருவரசு'என்று அழைக்கப் படுகிறது.மாமுனிகளின் திருவரசும்,மேல்புறம் இருந்த ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலும் இஸ்லாமிய படையெடுப்பாலும்/ காவிரியில் ஏற்பட்ட, பெருவெள்ளத் தாலும் சேதமடைந்து/இடிந்து அழிந்து விட்டன. அதற்குப் பின் வேறு பலர் அந்த நிலத்தை ஆக்கிரமித்திருந் தனர்.கடைசி ஆக்கிரமிப்பாளர்கள் அந்நிலத்தில் வேளாண்மை செய்து வந்தனர்.ஆசார்ய ஸ்வாமிகள்/பாகவதர்கள் எல்லாம் சேர்ந்து "திவ்யதேசப் பாரம்பரியப் பாதுகாப்புப் பேரவை"என்னும் அமைப்பைநிறுவி அதன்மூலம் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி, அந்த நிலம்(1.82 ஏக்கர்) 2016 ஜூலையில் மீட்கப்பட்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. அங்கு மணவாள மாமுனிகள் சந்நிதி/திருவரசு மண்டபம் அமைக்க வேண்டும் என்னும் அடியார்களது கோரிக்கையை,நிறைவேற்றுவதாக பெரிய கோயில் நிர்வாகத்தார் கூறினர்.( 10 ஆண்டுகள் கடந்தும், இதற்கான ஆயத்தங்கள் எவையும் நடந்ததாகத் தெரியவில்லை.!!??) இவை விரைவில் அமைய,இந்தத் நந்நாளில் மாமுனிகளையும், அவர் தம் உன்னத சீடர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாளையும், நாம் பிரார்த்தித்துக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை ) மாமுனிகளின் தீர்த்த நாளில், அவரது திருவரசிலும், திருமால் அடியார்களின் ஆராதனை நடைபெறுகிறது.(பல நூறு ஆண்டுகளுக்குப்பின் 2017ல்,மீண்டும் ஆராதனை தொடங்கியது!!!) "ஆசிலாத மணவாள மாமுனி அண்ணல், பூமியுறு ஐப்பசியில் திருமூலம், தேசநாளது வந்து, அருள்செய்த நம் திருவாய்மொழிப்பிள்ளை தான், ஈசனாகி எழுபத்து மூவாண்டு, எவ்வுயிர்களையும் உய்வித்து வாழ்ந்தனன், மாசிமால் பக்கத் துவாதசி மாமணி மண்டபத்து எய்தினன் வாழியே !!" "அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ, சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண்டு இரும் !!!" ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மனே ! ஸ்ரீரங்க வாஸினே பூயாத் நிதயஸ்ரீ: நித்யமங்களம் !! துலா மூலாவதீர்ணாய தோஷிதாகில ஸுரயே ! ஸெம்யஜாமாத்ரு முநயே ஸேஷாம் ஸாயாஸ்து மங்களம் !! (அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்) படங்கள்: 1.ஒப்பில்லாத ஆசார்யரும், ஈடு இணையற்ற சீடரும். 2.மாமுனிகள்--கோயில்,திருமலை, பெருமாள் கோயில், திருநாராயண புரம். 3.திருமலை ஆழ்வார் மண்டபம், மாமுனிகள் சந்நிதி,ஸ்ரீரங்கம். 4.திருவரசு நிலத்துக்கு,அருகிலுள்ள நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்நிதியில் மாமுனிகள்,ஸ்ரீரங்கம். 5,6:மாமுனிகள் திருவரசு/திருவரசில் அடியார்கள். #ராமாநுஜர்
ராமாநுஜர் - ஸகாயல் செலவை முலிகள் மடாப" 096 மணவாளமாமுனிகள் கோயில் திருபலை பருமாள்கோயில் திருநாராயாபுரம் ஸகாயல் செலவை முலிகள் மடாப" 096 மணவாளமாமுனிகள் கோயில் திருபலை பருமாள்கோயில் திருநாராயாபுரம் - ShareChat