ShareChat
click to see wallet page
search
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் காலை ஜெபம்* "'மிகவும் துன்புறுகிறேன்!’ என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்". (திருப்பாடல் 10,15-19) சொந்த மகனென்றும் பாராமல், உமது அன்பார்ந்த மைந்தரை எங்களுக்காக ஒப்புவித்த, எங்கள் அன்பு தந்தையே! இந்த ஓய்வு நாளில், உம்மைப்பற்றி நினைக்க, உமது வார்த்தைகளை சிந்திக்க, உம் திருமகனின் திருவுடலை புசிக்க, இந்த அதிகாலை வேளையில் எங்களை எழுப்பியுள்ளீரே! நன்றி இறைவா! அகில உலகையும் படைத்தவரே! நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறேன். துதிக்கிறேன். ஆராதிக்கின்றேன். இறைவா! எங்களுக்கு இன்று நீர் அளித்த, இந்த ஓய்வு நாளை ஆசிர்வதியும்! இன்றையத் திருப்பலியில் உமது இறைவார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்க, தியானிக்க, அதன்படி நடக்க, ஏற்ற சூழலை உருவாக்கியருளும். திருப்பலியில் இன்று நான் மனம் ஒருமித்து பங்கு கொள்ளவும், உமது வார்த்தைகள் என்னுள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆசீர்வதிப்பீராக. இறைவா! இக்கட்டான நேரங்களிலும், உமது வார்த்தையின்படி நடந்த எங்களது முதுபெரும் தந்தை ஆபிரகாமின், அசைக்க முடியாத விசுவாசத்தை எங்களுக்கும் தந்தருளும். இயேசுவே! இன்று திருப்பலியில் உமது திருவுடலை பெறும் கிறித்துவர்கள் அனைவருக்கும் நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். இயேசுவே! இந்த தவக்காலத்தில், நாங்கள் உமது மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, உம்மையே அணிந்து கொண்டு, உம்மைப் போல ஒளிர எங்களை ஆசீர்வதிப்பீராக. இறைவா, இன்றைய ஓய்வு நாளை, நான் உமக்கு உகந்த முறையில் கழிக்கவும், உம் அன்பை பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவியாக விளங்கவும் அருள் புரிவீராக! இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற ... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும், சுதனுக்கும்..(1) *ஆமென்.*
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat