*பூண்டி புதுமை மாதாவை நோக்கி ஜெபம் மற்றும் பிரார்த்தனை*
⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️
*நித்திய பிதாவே, உமது பிரிய மகளையும், மனுக்குல இரட்சகரே, உமது நேசத் தாயையும் சகலத்தையும் பரிபாலிக்கும் பரிசுத்த ஆவியானவரே. உமக்கு உகந்த பத்தினியுமாகிய புனித கன்னி மரியாயையும் நித்தியத்திலிருந்து நியமிக்கப்பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் விசேஷ விதமாய் மகிமைப்படுத்த தீர்மானித்தீரே, உமக்கே ஆராதனை!*
*திரியேக தேவனே, உமது நியமம்படி இப்பூமியில் ஒரு பகுதியாகிய இந்தியாவில் தமிழ்நாட்டில்., தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப் பள்ளியினருகில் உள்ள பூண்டி எனும் குக்கிராமத்தில் உமது விசேஷ அருள் மாரியால் அவ்வன்னை மூலமாய் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி இறைத்து வருகிறீரே உமக்கு ஸ்துதியும் ஸ்தோத்திரமும்!*
*பூண்டியில் எழுந்தருளியிருக்கும் புதுமை மாதாவே, இயற்கை சக்திக்கும் மனித வல்லமைக்கும் மேலாக உலக மக்களின் இக் கட்டு இடைஞ்சல்களைப் போக்கி அவர்கள் ஆசிக்கும் நன்மைகளை அபரிமிதமாய் அளிக்கும் உமது அன்பும் அனுக்கிரகமும் இப் பரந்த பாரத நாட்டில் மட்டுமேயன்றி உலகத்தின் பல பாகங்களிலும் பரவி இருக்கிறது. தேவனுக்கு அநவரத காலமும் ஸ்துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக!*
*இந்த சமயம் என் ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் அந்தஸ்திற்கும் ஏற்பட்ட கஷ்டத்தைப் போக்கவும் ஆசிக்கும் நன்மைகளை அடையவும் எப்பக்கமும் ஓடியாடி எவ்வித பயனுமின்றி, கடைசியாக பூண்டி புதுமை மாதாவே, நீரே தந்து மென்று உம்மைத் தேடி அடைந்து உமது பாதத்தில் விழுந்து கிடக்கிறேன்.*
*உமது வல்லமையுள்ள மன்றாட்டால் உமது அன்பு, அனுதாபம், நீதி, நியாயம், அனுசரணைகளை எமக்கு அளித்தருளும். என் ஆத்துமத்திற்கும் சரீரத்துக்கும் அந்தஸ்திற்கும் ஏற்பட்ட கஷ்டங்கள் முற்றிலும் விலகவும் எனக்குத் தேவையான நன்மைகளை நான் அடையவும் திரியேக இறைவன் சித்தப்படி எனக்கு அடைந்து கொடுத்தருளுங்கள் தாயே!*
*கடந்த காலக் குற்றங்களுக்கு மனஸ்தாபக் கண்ணீரோடு தக்க பரிகாரம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன் . மீதி யாயுள்ள என் வாழ்நாளை கடவுளின் மகிமைக்காகவும் என்னுடையவும் பிறருடையவும் நன்மைக்காகவும் செலவழித்த பின் இறுதியில் சமாதானத்தில் கண்ணை மூடி உம்முடன் சர்வேசுரனுடைய பேரின்ப பாக்கியத்தில் பங்கு பெற வரம் அடைந்து தாரும் தாயே!*
*🙏🏻ஆமென்.🙏🏻*
⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️
*பூண்டி புதுமை மாதா பிரார்த்தனை*
⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கிறிஸ்துவினுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பூலோகம் போற்றிடும் புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புதுமையால் பிரகாசித்து வரும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அண்டி வந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கேட்கும் வரத்தைத் தப்பாமல் கொடுக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்மைத் தேடி வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துன்பம் விலக ஆசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துயரப்படுவோருக்குத் தேற்றரவாய் இருக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எதிர்பார்க்கும் நன்மைகைளைப் பெறச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குடும்பம் விளங்க ஆசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குடும்பம் ஒற்றுமையாயிருக்க ஆசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குடும்பத்தில் சமாதானத்தை நிறுவும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வியாதியஸ்தர்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஊமையைப் பேச வைக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இருதய நோயைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சித்தபேதத்தைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பார்வை இழந்தோருக்குப் பார்வை அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பைத்தியத்தைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஊனமான கை கால்களை வழங்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கிடைக்காத பொருளைக் கிடைக்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
காணாத பொருளைக் கண்டடையச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பதவி உயர்வு கிடைக்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மகப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் வரமளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நம்பியவர்களுக்கு நல்ல உபகாரியாய் இருக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சிறுபிள்ளைகளுக்கு ஞான விளக்காய்ப் பிரகாசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கற்புக்குக் களங்கம் வராமல் காத்திடும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பாவத்திலிருந்து விலக்கிக் காத்திடும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துஷ்டர்களை மனந்திருப்பும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துன்மார்க்கரை நல்வழிபடுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பேய்ப் பிசாசுகளை நடுநடுங்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே ,
பாவிகளை மனந்திருப்பும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அமலோற்பவம் என்னும் நாமம் பூண்ட ஜென்ம இராக்கினியாய் விளங்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
*🌹செபிப்போமாக :🛐*
பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவே! ஆதாம் ஏவாள் பாவத்தால் சாபத்தை அடைந்து உலகில் பிறக்கும் மனிதன் இறக்குமட்டும் கஷ்டப்பட்டே தீர வேண்டும் என்கிற உண்மை எல்லோரையும் விட உமக்கே பகல் வெளிச்சம் ஆதலின் சாதி மத பேதமின்றி துன்புறுவோரை எல்லாம் வாருங்கள் என்று அழைத்து அவர்களது துன்பத்தை அகற்றி இன்பத்தை ஊட்டி வரும் உமது அன்பே அன்பு ; அனுதாபமே அனுதாபம் ; இந்தப் பாக்கியத்தை எல்லோரும் அடைய வேண்டி தேவ சந்நிதானத்தில் மன்றாடி மனுப்பேசி அதற்கான அருளையும் ஒளியையும் அடைந்து தாரும் தாயே!
*🙏🏻ஆமென்.🙏🏻*
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு


