கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.
சங்கீதம் 127:1
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
சங்கீதம் 127:2
நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா, அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
சங்கீதம் 127:3
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம் 127:4
வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 127:5
அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான், அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
சங்கீதம் 127:6
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Tamil Bible (தமிழ் பைபிள்) - Apps on Google Play
Tamil Bible (தமிழ் பைபிள்) offline loaded with rich features enhancing users

