*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்*
~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ் அவர்கள்
பாகம்-9
6-வது காட்சி
அன்று பெப்ருவரி மாதம் 21-ம் நாள். ஞாயிற்றுக்கிழமை, தவக்காலத்தின் முதல் ஞாயிறு. காலை 6 மணி. பெருங்கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் ஒரு மருத்துவர் இருந்தார். காட்சியின்போது பெர்னதெத்தின் மனநிலை, நாடித் துடிப்பு போன்ற பல தகவல்களை அறிய அனுப்பப்பட்டிருந்தார்.
வந்தாள் பெர்னதெத் வழக்கம் போல் காட்சி தொடங்கியது. முகம் மலர்ந்தது. சில நேரங்களில் முகத்தில் கவலை படர்ந்தது. விழிகளிலிருந்து கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் விழுந்து தெறித்தன.
அருகில் இருந்த மருத்துவர் சாதாரண நிலையில் பெர்னதெத்தை நன்றாகப் பார்த்திருக்கிறார். இப்போது அவளுடைய பரவச நிலை. நாடித் துடிப்பு, செயல்கள் அனைத்தையும் உற்றுக் கவனித்த அவர் மருத்துவ ரீதியாக இதற்கு விளக்கம் தர யாராலும் முடியாது என்றார். பரவச நிலை நீண்ட நேரம் நீடித்தது.
பெர்னதெத் தெளிவான. சாதாரண நிலைக்கு வந்ததும், மருத்துவர் அவளிடம் "எப்படி பரவச நிலையிலிருந்து விடுபடுகிறாய்?..." என்று பல கேள்விகளைக் கேட்டார். அதற்கு இவ்வாறு பெர்னதெத் பதில் கூறினார்.
அந்த அம்மாவின் பார்வை என்னிடமிருந்து விலகியதும் நான் சுய உணர்வு பெற்றேன். அப்போது அம்மா என்னிடம், "பாவிகளுக்காக செபி. பாவ நிலையில் தள்ளாடித் தத்தளிக்கும் உலகத்துக்காக செபி” என்றார்கள்.
பெர்னதெத்துக்குத் துன்பம் தொடங்கியது. மசாபியேல் குகையருகே பெருகி வரும் கூட்டத்தைக் காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. உண்மையை அறியவும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். பெர்னதெத்தைக் கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்டுத் துளைத்தும், எச்சரித்தும், பயமுறுத்தியும் அவள் மீது பாய்ந்தனர். அவள் யாருக்கும் அஞ்சாமல் உண்மையை விளக்கினாள்.
பெர்னதெத்தின் தந்தை பிரான்ஸ்வா சூபீரு பெர்னதெத் குகைக்குப் போக யாரும் தடை செய்யாமல் பார்த்துக் கொண்டார். அதிகாரிகளிடம் வாதாடினார்.
காட்சி நடைபெறவில்லை
பெப்ருவரி மாதம் 22-ம் நாள், திங்கட்கிழமை, திட்டமிட்டபடி காலை 8.30 மணிக்கு கெபிக்குச் சென்றாள் பெர்னதெத். பெரும் கூட்டம் கூடியிருந்தது. பெர்னதெத் நீண்ட நேரம் செபமாலை செபித்துக் கொண்டிருந்தான்.
பின் எழுந்து கூட்டத்தில் சிலரிடம், இன்று அம்மா குகைக்கு வரவில்லை என்றாள். பெரிய ஏமாற்றம்! பெர்னதெத்துக்கு தன் அழுகையை அடக்க முடியவில்லை.
“கெபிக்குச் செல்லும்போது, கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்னைத் தடை செய்தது. மிகச் சிரமப் பட்டுத்தான் நடந்து வந்தேன்'' என்று தன் பெற்றோரிடத்தில் பெர்னதெத் சொன்னாள்.
ஏழாவது காட்சி
அன்று பெப்ருவரி மாதம் 23-ம் நாள். செவ்வாய்க் கிழமை. அதிகாலை 6 மணிக்கெல்லாம் கூட்டம் கூடி விட்டது. குகையில் தோன்றும் அம்மாவைப் பார்க்க முடியாவிட்டாலும், பெர்னதெத்தின் பரவச நிலையைப் பார்க்கவே ஆர்வம் காட்டினர் மக்கள். காட்சியை நம்ப மறுத்த மதிப்பிற்குரிய சில பெரிய மனிதர்களும் அன்று வந்திருந்தனர். இவர்கள் மசாபியேல் குகையைச் சுற்றி மேலும் கீழும் ஆராய்ந்து பார்த்தார்கள். யாரையும் அவர்கள் காண முடியவில்லை. இவர்களுள் மருத்துவர்கள் டாக்டர் டோசு (Dr. Dazous), டாக்டர் எஸ்ட்ராட் (Dr. Estrade) என்ற இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் லூர்து நகர் காட்சிகள் பற்றி நன்கு ஆராய்ந்து வரலாறு எழுதியவர்கள்.
பெர்னதெத் தன் அம்மா. தன் அத்தை, மதாம் பெர்னர்ட், மதாம் பேசில் இவர்களுடன் கெபிக்கு வந்து சேர்ந்தாள். முழந்தாளிலிருந்து “அருள் நிறைந்த மரியாயே... தொடங்கியவுடனே பரவசமானாள். ஒரு மணி நேரம் இதே நிலையில் இருந்தாள். இக்காட்சியில் அம்மா(தேவமாதா) பெர்னதெத்தைப் பெயர் சொல்லி அழைத்தார்கள்
"பெர்னதெத்!" என்று மாதா அழைத்தார்கள்
“அம்மா, இதோ இங்கேதான் இருக்கிறேன். என்றாள் பெர்னதெத்
"உனக்கு ஒரு இரகசியத்தைச் சொல்லப் போகிறேன். இந்த இரகசியம் உனக்கு மட்டும்தான்! இது உன்னைப் பற்றிய இரகசியம். இதை உலகத்தில் யாருக்கும் வெளியிட மாட்டேன் என வாக்குறுதி தருவாயா?" என்று மாதா கூறுகிறார்கள்
"ஆம், வாக்குறுதி அளிக்கிறேன் அம்மா." என்று பெர்னதெத் கூறுகிறார்
"சரி, என் மகளே, இப்போது நீ குருக்களிடத்தில் போய் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்ட நான் விரும்புவதாகச் சொல்." என்கிறார்கள் மாதா
பெர்னதெத்துக்கு தேவமாதா சொன்ன மூன்று இரகசியங்களையும் இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்தது போல் தன் நெஞ்சுக்குள் பூட்டி வைத்துக் காப்பாற்றினாள். பெர்னதெத். யாருக்கும் சொல்லக் கூடாது என அன்னை எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். வாக்குறுதிப்படி நடந்து வருகிறேன். நான் நித்திய பேரின்ப வீட்டுக்குச் செல்லும் வரை காப்பாற்றி வருவேன்" எனக் கேள்வி கேட்பவர்களிடம் சொல்வாள் பெர்னதெத்
தொடர்ந்து இனைந்திருங்கள்.....
ஆமென்.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்


