சிவன் கோவிலுக்கு சென்று எப்படி
வழிபட வேண்டும்?
முதலில் யாரை வணங்க வேண்டும்? சிவாலய வழிபாட்டினை எங்கு துவங்கி, எங்கு நிறைவு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சிவன் கோவிலில் வழிபடும்
சரியான முறை...
*1. விநாயகர் -* தடைகள் விலக "ஓம் கணபதயே நமஹ" என சொல்லி வழிபட வேண்டும்.
*2. கொடி மரம் -* கோவிலின் வழிபட்ட சக்தியை, பலனை பெற
*3. நந்தி -* வேண்டுதல் நிறைவேற வழிபட வேண்டும்.
*4. அம்மன் -* குடும்ப நலன், மன அமைதிக்கு வேண்டிக் கொள்ள வேண்டும்.
*5. மூலவர் -* சிவனை வழிபட வேண்டும்."ஓம் நமசிவாய" மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட வேண்டும்.
*6. தட்சிணாமூர்த்தி -* ஞானம், கல்வி, தெளிவு கிடைக்க வழிபட வேண்டும்.
*7. முருகர் -* தைரியம், வெற்றி பெற வழிபட வேண்டும்.
*8. சண்டிகேஸ்வரர் -* பாவ நிவாரணம் கிடைக்கும்.
*9. பைரவர் -* பயம் நீங்க வழிபட வேண்டும்.
*10. நவகிரகம் -* சனி மற்றும் சந்திர தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற வழிபட வேண்டும்.
மூலவரை 3 அல்லது 5 முறை பிரதட்சணம் செய்து வழிபட வேண்டும். மூலவர் சன்னதியை பிரதட்சணம் செய்யும் போது வலது பக்கமாக நடக்கக் கூடாது. இடது பக்கமாக தான் சுற்றி வர வேண்டும். மனதில் "ஓம் நமசிவாய" என சொல்லிய படி வலம் வர வேண்டும். பிரதோஷ வேளையில் மட்டும் சோமசூக்த முறைப்படி சிவாலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும். அனைத்து தெய்வங்களையும் தரிசனம் செய்து, வழிபட்ட பிறகு இறுதியாக கொடிமரத்திற்கு முன்பு வந்து வணங்க வேண்டும். ஆண்களாக இருந்தால் சாஷ்டாங்க நமஸ்காரமும், பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். அதற்கு பிறகு கொடி மரத்திற்கு முன்பு அமர்ந்து நம்முடைய வேண்டுதல்களை சொல்லி, பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு விட்டு கடைசியாக கொடிமரத்திற்கு முன்போ அல்லது கோவில் மண்டபத்திலோ அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யலாம். அப்படி தியானம் செய்ய முடியாதவர்கள். கருவறையில் தரிசனம் செய்த இறைவனின் திருவுருவத்தை அப்படியே மனதில் நினைத்து, இறைவனிடம் மனம் விட்டு அமைதியாக பேச வேண்டும். அப்படி இறைவனிடம் பேசும் போது மனதில் ஒரு விதமான அமைதி, தெளிவு, நிம்மதி பிறப்பதை உணர முடியும். சில சமயங்களில் பல நாட்களாக நமக்குள் இருந்த கேள்விகளுக்கு பதிலும், முடிவு எடுக்க முடியாமல் இருந்த விஷயத்தில் தெளிவான முடிவும் கூட கிடைக்கும். இது இறைவன் உங்களுக்கு அருகிலேயே இருந்து, உங்களை வழி நடத்துகிறார் என்பதற்கான அறிகுறியாகும்.
சிவன் கோவிலுக்கு ஒரு முறை இப்படி சென்று வழிபட்டு பாருங்கள். ஈசன் உங்கள் அருகில் இருப்பதையும், ஈசனின் கருணையும், அருளும் உங்களுக்கு இருக்கிறது என்பதையும் உங்களால் நிச்சயம் உணர முடியும். #🔥 ருத்ராபிஷேகம்🕉️ #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️
00:18

