ShareChat
click to see wallet page
search
💐💐🔔🙏ஓம் நமசிவாய வாழ்க🙏🔔💐💐 "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்,"! எவ்வுயிர்களாயினும் தம் அறிவால் உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன்,அவனை மனத்தால் உணர்வதும்,மொழியினால் ஓதுதலால் அடைவதும் அவ்வளவு எளிதானது அல்லவாம், அப்படியே அறிவதற்கு அரியவனாய் இருப்பவனாக இருப்பினும், தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினைக் கொண்டவனாய் இருக்கிறானாம்,அவன் கருணையே அவனை அடைவதற்கான கருவி, பிறைச் சந்திரனையும் கங்கையையும் தன் திருச்சடையில் அணிந்து பல்லுயிர் காக்கும் பண்பைப் பெற்றவனாம்,அளவிட இயலாத ஒளியினை உடையவனாம்,அரியவன்,வேணியன்,சோதியன் இப்படியெல்லாம் பெருமை உடையவன் தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாகவும் இருப்பவன் கூத்தப் பெருமான், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த அவன் திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம் என்று சேக்கிழார் பெருமான் முடிக்கிறார், அதன்படி இன்று மாலை வேளையில் பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் ஆலயம் சென்று அவன் தாள் பணிந்து வணங்கி வழிபட்டு வாழ்வை வளப்படுத்திக் கொள்வதும்,அவன் கருணையால் நீடு வாழ நல்லருள் பெறும் பாக்கியங்களைப் பெறுவோம் என்று பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் வாழிய நலம், 💐💐💐💐💐🙏💐💐💐💐💐 💐💐🔔🙏ஓம் நமசிவாய வாழ்க🙏🔔💐💐 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:47