தூய பக்தி
ஒரு தடவை துக்காரம் பண்டரிநாதனுக்கு ஒரு லெட்டர் எழுதி அது பண்டரிபுரம் போகும் பக்தர்கள் மூலமாக கொடுத்து அனுப்பப்பட்டது. அந்த பக்தர் நேரே பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கன் ஒரு செங்கலில் நின்று காட்சியளிப்பதை கண் குளிர தரிசனம் செய்து சேவித்து வருத்ததுடன் சொன்னார்:
''பாண்டுரங்கா, பாவம், நமது துக்காரம் ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருப்பதால் நடந்து வந்து உன்னை பார்க்க முடியவில்லை என்று வருத்தத்துடன் உனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் நான் அதை படிக்கவா --- தேவையே இல்லை ,உனக்குதான் அதில் என்ன எழுதியிருக்கிறார் என்றே தெரியுமே'' என்று அந்த கடிதத்தை பாண்டு ரங்கனின் பாதத்தில் வைத்தார்.
"ருக்மணி, நம் துக்கா, ரொம்ப நோய்வாய்பட்டு நம்மை பார்க்க வரமுடியவில்லை என்று விசனத்தோடு எழுதியதை பார்" . கடிதத்தை பாண்டுரங்கன் ருக்மணியிடம் காட்ட,
'நாதா, நாமே சென்று அவரைப் பார்த்து வருவோமே" என்றாள் ருக்மணி
"நீ சொல்வது சரி, ஆனால் இங்கு நம்மைக் காண வரும் பக்தர்கள் எமாற்றமடைவார்களே, நாம் நம் கருடனை அனுப்பி அவரை இங்கு அழைத்துக் கொண்டுவர செய்வோம். துகாராமுக்கும் ஒரு பதில் கடிதம் எழுதினான் விட்டலன் -
"அன்பு துக்கா, உன்னை பார்க்காமல் என்னாலும் இருக்க முடியவில்லை. கருடனிடம் இந்த கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன் அவன் மீது ஆரோகணித்து உடனே புறப்பட்டு வா. மற்றவை நேரில் - உன் பாண்டுரங்கன்"
தான் போகமுடியாததால் தெருவில் பண்டரிபுரம் போகும் பக்தர்களையாவது பார்ப்போமே என்று தேஹூ கிராமத்தில் தனது வீட்டு வாசலில் படுத்திருந்தார் துக்காராம். அவர் முன்வந்து இறங்கினான் கருடன்
"துக்காராம் சுவாமிகளே, விட்டலன் உங்களை கையோடு அழைத்து வரச்சொன்னார். இதோ உங்களுக்கு விட்டலனின் கடிதம்".
கருடன் நீட்டிய கடிதத்தை வாங்காமலேயே இரு கரம் கூப்பி வணங்கி கருடனிடம்
' ஐயோ, இது அபசாரம். நீங்கள் நாராயணனை தாங்கி செல்பவர், நானோ அவர் காலணியிலிருந்து விழும் தூசிக்கும் கீழானவன் உங்கள் மீது இந்த நாயேன் ஏறி உட்காருவதா? தங்கத்தால் செய்தாலும் செருப்புக்கு இடம் காலின் கீழ் தானே, தலையில் அல்லவே! அவரையே முடிந்தால் வரசொல்லுங்களேன்" என்றார் துக்காராம்
கருடனிடம் செய்தி அறிந்த விட்டலன் " வா ருக்மணி நாமே செல்வோம்"
பண்டரிபுரம் செல்வோர் வருவோரையே ஏக்கமுடன் பார்த்துக்கொண்டு வாசலில் படுத்திருந்தபோது ஒருநாள் சர்வாலங்காரமுடன் ருக்மணியோடு விட்டலனை துக்காராம் வீட்டுக்கு முன் கொண்டுவந்து கருடன் இறக்கியவுடன் துக்காராமுக்கு காத்திருக்காமல் பாண்டுரங்கன் ஓடோடி வந்து துக்காராமை மார்போடு அணைத்து கொண்டான்.
பக்தனும் பகவானும் ஒருவரையொருவர் மனமார தழுவினர். #🤔தெரிந்து கொள்வோம்


