ShareChat
click to see wallet page
search
_*வந்தாலும் வெற்றியை நோக்கி ஓடுவதே அற்புதம்*_ _*ஏனெனில் தேங்கி நிற்கும் குளம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதில் அழுக்கு தான் இருக்கும்.*_ _சின்ன ஒடையாக_ _இருந்தாலும் அந்த தண்ணீர் கண்ணாடி போல் இருக்கும்._ _*வாழ்க்கையில்*_ _*தோல்வி*_ _*வந்தாலும் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்றுவிடக்கூடாது.*_ _பலமுறை தோல்வி கண்டாலும் மனப்பதட்டம் வரும்_ _ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல் தான் இருக்கவேண்டும்_ _*எந்த ஓய்வும்*_ _*நம்முடைய*_ _*அடுத்த பயணத்திற்கான ஆயத்தம் தான்*_ _பணம், புகழ், காதல்,_ _கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே_ _இந்த பயணம் மூலமாகத் தானே கிடைத்தது வெற்றியும்_ _கிடைக்கும்_ _*எல்லோரும் ஒரு சேரக் கைவிட்டாலும்,*_ _*இல்லை எனச் சொல்லி கை கழுவி விட்டாலும்,*_ _*நீங்கள் வழிபடும் இறைவன்*_ _*கைகள் உங்களைக் கைப்பற்றும்.*_ _*கடைசி வரை உங்களைக் காப்பாற்றும்.*_ _படைக்கும்_ _போதே உங்களை_ _அறிந்தவர் இறைவன்._ _அவருக்கு தெரியும்_ _உங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும்_ _என்பது._ _இழந்தது எதுவாயினும் அதை விடச் சிறந்தது உங்களுக்கு கிடைக்கும் கவலையை விட்டொழியுங்கள்._ _*அன்பை அகத்தில் வையுங்கள்.*_ _*ஆசையைப் புறத்தில் வையுங்கள்.*_ _*உண்மையை உள்ளத்தில் வையுங்கள்.*_ _*கருணையைக் கண்களில் வையுங்கள்.*_ _*சிந்தையில் இறைவனை வையுங்கள். அனைத்தும் வெற்றியாகும்.*_ _உலகப் புகழ் பெற்ற_ _நாடகமேதையான ஷா அவர்கள் ஒரு குறுகலான பாதையில் நடந்து கொண்டிருந்தார்._ _எதிரே வந்தவர் ஷாவுக்கு வேண்டாதவர் போலும். எனவே யாருக்கு யார் வழிவிடுவது யார் செல்வது என்ற பிரச்னை மூண்டது._ _*அப்போது எதிரே வந்தவர்,*_ _*"நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவதில்லை" என்றார் கோபமாக.*_ _உடனே ஷா சற்று புன்முறுவல் பூத்தவராய்_ _"நான் வழிவிட்டு ஒதுங்குவேன்”_ _என்று சொல்லி விலகி நின்றார்._ _எதிரே வந்தவருக்கு_ _நெற்றியடி._ _*இதில் ஷா அவர்களின் சாமர்த்தியம் மட்டும் சம்மந்தப் படவில்லை.*_ _*பிறருக்கு விட்டுக் கொடுப்பதில் ஒருபோதும் நாம் குறைந்து போகமாட்டோம்"*_ _*என்ற உண்மையும் சம்மந்தப்பட்டிருக்கிறது.*_ _அறிஞர் ஷாவே விட்டுக் கொடுக்க தயங்கியவராகத் தெரியவில்லை நாம் என்ன ஷாவை விட சாமானியரா அப்படி இருந்தாலும் பரவாயில்லை விட்டுக் கொடுப்பதால் வீண் போகமாட்டோம்._ _*இதைத் தான்*_ _*“விட்டுக்*_ _*கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.*_ _*கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” என்கின்றனர்.*_ _நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...._ _*பிறருக்கு விட்டுக்*_ _*கொடுப்பதால் உங்களுடைய*_ _*நற்பெயரை விடமாட்டீர்கள்,*_ _*சுயமதிப்பை விடமாடீர்கள்,*_ _*அறிவை விடமாட்டீர்கள்,*_ _*ஆனந்தத்தை விடமாட்டீர்கள்.*_ _*மாறாக*_ _*அவற்றையெல்லாம் அதிகரித்துக் கொள்வீர்கள்.*_ #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
கதை சொள்ளரோம் - தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி டு தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி டு - ShareChat