ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் காலை ஜெபம்* "ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்". (திருப்பாடல் 30: 1,3. 4-5. 10-12b) எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய திருநாமம் பரிசுத்தம் என போற்றுகின்றேன். என்னை முழுமையாக உமது பாதத்தில் அர்ப்பணிக்கின்றேன். கடந்த இரவு முழுவதும் என்னை பாதுகாத்த, உமது மேலான ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, இந்த காலை வேளையில் உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னை கைதூக்கிவிட்டீர். இறைவா! என் மகிழ்ச்சியையும், துயரங்களையும் என்னிடமுள்ள அனைத்தையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். உம்மிடமே நிலையான அமைதியும், ஆறுதலும் எமக்கு உள்ளன. அன்று கப்பர்நாகுமில், அரச அலுவலர் மகனுக்கு நீர் செய்த அரும் அடையாளத்தைப் போல, நோயுற்ற எண்ணற்ற குழந்தைகளைத் தொட்டு, அவர்களைக் குணமாக்கிட உம்மை இரந்து வேண்டுகிறேன். இறைவா! இந்த நாள் முழுவதும் உம்முடைய மகிமையை காணும்படியாக செய்வீராக. உம்மோடு உமக்காக வாழவும், என் வாழ்விலும், தாழ்விலும் உம்மை மட்டுமே அன்பு செய்யவும் அருள் புரியும். இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற ... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும், சுதனுக்கும்..(1) *ஆமென்.*
🚹உளவியல் சிந்தனை - 8 96 8 96 - ShareChat