👑 மூன்றாம் உலகப்போர் வந்தால் அப்போது பணம் எல்லாம் செல்லாமல் போய்விடும் . வங்கிகள் எல்லாம் காணாமல் போய் திவால் ஆகிவிடும். பணம் என்பது காகிதம் ஆகிவிடும்.
👑 போர் வந்தாள் உணவுகள் மட்டுமே உன்னதமான பொருளாக மாறிவிடும் . நீங்கள் எதைக் கொடுத்தாலும் உணவு மட்டும் கிடைக்காத சூழலுக்கு போய்விடும் . நீங்கள் தற்போது போர் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காமல் அலைவதை சில காணொளிகளில் பார்த்திருப்பீர்கள்.
👑 இதற்கு உலகத்தில் இருக்கும் உயர்ந்த பணக்காரர்கள் எல்லாம் ஆயத்தமாகி விட்டார்கள் . நிலத்தை வாங்கி தனக்கான உணவை தானே உற்பத்தி செய்ய துவங்கி விட்டார்கள்.
👑 விவசாயமே செய்ய முடியாத பாலைவனமான அரபு நாடுகளில் எல்லாம் இப்போது விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ❓
👑 தங்கத்தின் விலை ஒரு நாள் தகரத்தின் விலைக்கு மட்டமாக குறையும் இவையெல்லாம் ஒரு ஏமாற்று வேலை . பாவம் பாமர மக்கள் தான் தங்கத்தை சேமிப்பிற்காக வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
👑 பிறகு எப்படி தங்கம் இல்லாமல் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க முடியும் என்போருக்கு எனது ஒரு அறிவுரை. தங்கம் போட்டு அனுப்பினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற ஒரு ஆணுக்கு உங்கள் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்காதீர்கள் அப்படிப்பட்ட ஆண் உங்கள் பெண் குழந்தைகளை ஒருபோதும் ஆனந்தமாக வைத்து குடும்பம் நடத்த மாட்டார்கள்.
👑 அதற்கு பதிலாக உங்கள் பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் உயர்ந்த பதவிகளை வாங்கி கொடுங்கள் சிறந்த கல்வியை கொடுங்கள் அது மட்டுமே அழியாத சொத்தாக எப்போதும் இருக்கும்.
💚அன்புடன் உங்கள்
🌿இயற்கையாளன் தவம்
#3ஆம் உலக போர் ரஷ்யா #உலக போர் #3ஆம் உலக போர் 🌋🌪️ #உலக போர் அனாதைகள் தினம் ஜனவரி-6 #உலக போர்#


