ShareChat
click to see wallet page
search
*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *11.02.2026 (புதன்)* *⚜️மகிமை நிறை மறையுண்மைகள்⚜️* *🌿🌹முதலாவது. ஆண்டவர் இயேசு உயித்தெழுந்ததைத் தியானித்து,* இன்று தூய லூர்து அன்னையின் விழாவினைக் கொண்டாடும் நாம், நோயுற்றோரின் பாதுகாவலியான தூய லூர்து அன்னையை நோக்கி நல் ஆரோக்கியத்திற்காக செபிப்போம். நோயுற்ற அனைத்து மக்களும் பூரண நலம் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹இரண்டாவது. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,* இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 37:39-ல், *"நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில்அவர்களுக்கு வலிமையும் அவரே."* என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். செய்யாத குற்றத்திற்காக சிறையில் அவதியுறும் எண்ணற்ற மக்களின் மீட்பிற்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹மூன்றாவது. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,* இன்றைய நற்செய்தியில், *"வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்."* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். நம்முடைய வார்த்தைகள் பிறரைக் காயப்படுத்தாத, வன்மத்தைக் கக்காத அன்பையும், ஆறுதலையும் அளிக்கின்ற வார்த்தைகளாக இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹நான்காவது. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,* பெர்னதெத்துக்கு 18 முறை தரிசனமளித்த தூய லூர்து அன்னை, திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களில் 15 மறையுண்மைகளை நாளுக்கு ஒன்றாக தியானித்து செபிக்க வலியுறுத்தினார். குடும்ப செபமாலை செபிக்கும் பழக்கத்தை இல்லங்களில் தொய்வில்லாமல் கடைபிடிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹ஐந்தாவது. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,* லூர்தூ திருக்காட்சியில் "நானே அமல உற்பவம்" (பாவம் ஏதுவுமின்றி பிறந்தவர்) என்று மொழிந்த நம் அன்னையின் திரு பக்தியை பிரிவினை சகோதரர்களும் உணர வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசு - இறைவழித்தை 999 குரும பி்வரிப 11 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் அரசர்கள் 10: 1-10 திருப்பாடல்  தீட்டுப் 37: படுத்துகின்றன ' 5-6,30-31,39-40 மாற்கு 7: 14-23 மாற்கு 7:23 இறைவழித்தை 999 குரும பி்வரிப 11 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் அரசர்கள் 10: 1-10 திருப்பாடல்  தீட்டுப் 37: படுத்துகின்றன ' 5-6,30-31,39-40 மாற்கு 7: 14-23 மாற்கு 7:23 - ShareChat