கேள்வி :
"#தந்தை_பெரியாருக்கு கட்சி, பணம், தொண்டர்கள், பிரசாரர்கள் இருந்தும் ஏன் #தேர்தலில் நிற்கவில்லை....?? "
~~~~~~🤔🤔🤔🤔~~~~~~
,
பதில் :
" இது #ஜனநாயகம் அல்ல, பண நாயகம்,
#உயர்சாதி நாயகம் என்று பெரியார் நினைத்தார். தேர்தலை மிக #மோசமான விஷயமாக பெரியார் நினைத்தார்.
மக்களிடம் ஓட்டுகள் வாங்குவதற்காக மிக மிகக் #கேவலமான வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
தான் நினைத்ததை #தைரியமாகச் சொல்ல முடியாது என்று உணர்ந்திருந்தார்.
தேர்தலில் இறங்கினால் மக்களுக்கு #விருப்பமானதைப் பேச வேண்டும்;
அது நம்மால் #முடியாது என்று மறுத்தார்.
"இரண்டு முறை அவருக்கு சென்னை ராஜதானியின் #முதலமைச்சர் பதவி (அன்று அதற்கு #பிரதமர் என்று பெயர்!) தேடி வந்தபோதும், 'இது நமக்கு சரியா வராதுங்க’ என்று மறுத்துவிட்டார்.
''நான் ஒரே நேரத்தில் #இருபதுக்கும் மேற்பட்ட பதவியில் இருந்துவிட்டேன். அது #சரிப்பட்டு வராது'' என்று சொன்னார்.
பெரியார் எழுதிய, '#நான்_யாரைத்தான்_எதிர்க்கவில்லை?’ என்ற கட்டுரையைத் தேடிப் படியுங்கள். அவர் #எதிர்த்த நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள், கொள்கைகள், நிறுவனங்களை அதில் சொல்லி இருப்பார். ''நான் ஒரு #அழிவு_வேலைக்காரன்'' என்பது அவரது கருத்து. அத்தனையும் #எதிர்க்கும் ஒருவரால், எப்படித் #தேர்தலில் நிற்க முடியும்? "
~~~~~🤔🤔✍️🎙️📚📖🎙️🤔🤔~~~~ #👨மோடி அரசாங்கம்


