என் நித்திரையை கலைத்துவிட்டு
நிம்மதியாக உறங்குகிறாய்...என் நிம்மதியை கலைத்து
நித்திரையை தொலைக்க செய்த
உன் நினைவுகளை நான் எப்படி தண்டிப்பது.
நகர்ந்து செல்லும் உன் நினைவுகளுடன்
கடந்து செல்கிறேன் என் நிமிடங்களை...
தொலைந்து போன என் சுவடுகளை
சுவடே இல்லாமல் தேடுகிறேன்
என் பயணங்களில்.
நீ தேடுவாயென்றால் தொலைந்து போக ஆசைதான்...நீ தேட மறந்து தொலைந்திடுவேனோ .. என்ற பயமே இன்னும் நான் தொலையாமல் இருக்கிறேன்.
நான் சொல்லாமலே புரிந்துகொள்ளும் உனக்கு நான் சொல்லித்தான் புரிய வேண்டுமென்றால் உனக்கு புரியாமலே
இருந்துவிட்டு போகட்டும்.
#💞Feel My Love💖


