அடிக்கிற வெயில்ல ட்ரெஸ் போடவே முடியல எல்லா பாக்கணும் வேர்க்குது கொஞ்ச நேரம் தூங்கலன்னு பாத்தா அது வேற வரமாட்டேங்குது என்ன டிசைன் இது #🔥 கோடை வெயில் மீம்ஸ் 😂
*ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன.*
*Danger -அபாயம்*
Death- மரணம்
Despair -மனமுறிவு
Discourage -மனத்தளர்ச்சி அடை
Disappointment -ஏமாற்றம்
Destruction - அழிவு
Debt - கடன்
Distress-துன்பம்
Disease -நோய்
Dead-மரணம்
Dim-தெளிவற்ற
Detained -தோல்வி
Depression - சோர்வு,கலக்கம்
Drunkard -குடிகாரன்
Down- இறக்கம்
Divide -பிரிவு
Deny-மறுத்தல்
Decay-அழுகுதல்
Deceive -ஏமாற்றுதல்
Decrease -குறை
Dash-மோதுதல்
Dull-அசதி
Duel -சண்டை
Dust-மாசு
Dispute-கலகம்
Dminish-குறைவு
Disturb -தொல்லை
Doubt-சந்தேகம்
Debit -செலவு
Dormant -உறக்க நிலை
Drown-முழ்குதல்
Ditch-பள்ளம்
Dowry -வரதட்சணை
Divorce -திருமணம் முறிவு
Dissolve -கலைத்தல்
Debar-தகுதி இழப்பு.
மேற்கண்ட
*துன்பங்களை (D)*
*போக்குபவன்(Go)*
*God இறைவன்(Go-D)*
எனவே இறைவனை அனுதினமும்
தொழுது நம் செயல்களைத் துவக்குவோம்.
🙏🙏🙏 #🚹உளவியல் சிந்தனை
ஆழமான பெண்களை உறவுகளில் கையாள்வது கடினம். ஏன்?
சில பெண்கள், ஆழமான பெண்ணாக இருப்பது என்பது எல்லோராலும் எளிதில் கையாள முடியாத ஒரு தீவிரத்துடன் வாழ்வதாகும்.
ஆழமான பெண்ணுடன் உறவுகள் ஏன் பெரும்பாலும் பிராகாசிப்பதில்லை:
அவள் ஆழமான கேள்விகளைக் கேட்கிறாள்:
ஒரு ஆழமான பெண் சிறிய உரையாடல்களை விரும்ப மாட்டாள். சந்தித்த முதல் நாளில் கூட உங்கள் கனவுகள், அச்சங்கள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய கேள்விகளைக் கேட்பார். ஆழமற்ற உரையாடல்களில் அவளுக்கு ஆர்வம் இருப்பதில்லை.
மிருகத்தனமான நேர்மை:
அவள் எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையை மதிக்கிறாள். அவள் உண்மையை அப்படியே சொல்கிறாள், உன்னிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறாள். பூசி மொழுகுவது அவளுடைய பாணி அல்ல.
அவள் விரும்புவதை அவள் அறிவாள்:
அவள் உறவுகளுடன் விளையாடுவதில்லை. அவள் உன்னை விரும்புகிறாள் என்றால், அவள் அதை உடனடியாக அறிந்துகொள்வாள், அவளுடைய ஆற்றலைச் சரியாக உணருகிறாள். பெண்களுக்கு ஆண்களை விட உள்ளுணர்வு அதிகம்.
உறவுகளில் ஆழத்தை விரும்புவாள்:
வேடிக்கையான நாட்கள் நன்றாக உள்ளன, ஆனால் அவள் அதைவிட அதிகமாக தேடுகிறாள். அவள் ஆழமான, நட்பான உரையாடல்களை விரும்புகிறாள், உங்கள் கதையை, உங்கள் வலியைப் புரிந்துகொள்ளவும், அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்கவும் அவள் விரும்புகிறாள்.
நெருக்கத்திற்கு அஞ்சாதவள் :
நெருங்கி பழகுவதற்கு பயப்படுவதில்லை. அவள் நெருக்கத்தை ஒரு பலமாகப் பார்க்கிறாள், பலவீனமாக அல்ல, ஆழமான தொடர்புகளைப் பொக்கிஷமாகப் பார்க்கிறாள். ஏனென்றால் யாரை நெருக்கத்தில் வைக்க வேண்டும் அவள் நன்றாக அறிந்திருக்கிறாள். அவளை மனத்தால் நெருங்க முடியாதவன் உடலால் நெருங்க முடியாது.
அவள் உங்கள் மூலம் சரியாகப் பார்க்கிறாள்:
ஒரு ஆழமான பெண்ணுக்கு மனிதர்களை படிக்கும் அசாத்தியமான திறன் உள்ளது. உங்கள் பயம், உங்கள் பலம் மற்றும் உங்கள் உண்மையை அவள் கவனிக்கிறாள். இந்த குணம் உங்கள் அமைதியை குலைக்கலாம்., ஆனால் இதுதான் இருவருக்குள் நம்பகத்தன்மையை உருவாக்கும் வழி.
நிலைத்தன்மை:
மென்மையான அல்லது காதலுடன் கூடிய சமிக்ஞைகள் அவளை அணைக்கின்றன. அவள் நம்பகத்தன்மையை மதிக்கிறாள், இந்த நெருக்கமே நம்பிக்கையின் அடித்தளம் மற்றும் நீடித்த பந்தம் என்பதை அறிவாள்.
தீவிர உணர்ச்சி:
அவளுடைய உணர்ச்சிகளும் எண்ணங்களும் சக்திவாய்ந்தவை, அவள் செய்யும் எல்லாவற்றிலும் அவள் தன்னை முழுமையாக ஈடுபடுத்துகிறாள். அத்தகைய தீவிர ஈடுபாட்டிற்கு நீங்கள் தயாராக இல்லையெனில் உங்கள் பயணம் கடினமே.
ஆழமாக நேசிப்பாள் அல்லது விலகிடுவாள்:
மேலோட்டமான உறவுகளில் அவளுக்கு விருப்பமில்லை. நீங்கள் அவளுடைய ஆழத்தை உணர முடியாவிட்டால், அவள் உங்களுக்குள் குடியேற மாட்டாள். காதல் என்பது பரஸ்பரம் அல்லது அர்த்தமுள்ளதாக இல்லாதபோது அவள் எளிதில் விலகிச் செல்கிறாள்.
அவள் காத்திருக்க மாட்டாள்:
ஒரு ஆழமான பெண் தன்னைப் பற்றி நிச்சயமற்ற ஒருவருக்காகக் காத்திருக்க தயாரக இருப்பதில்லை. அந்த அளவுக்கு தன்னை மதிக்கிறாள். அவள் வலிமையானவள், சுதந்திரமானவள், தன் மதிப்பை சமரசம் செய்வதை விட தனியாக இருக்க தயாராக இருக்கிறாள்.
ஒரு ஆழமான பெண் அனைவருக்கும் அமைவதில்லை. நினைத்ததற்கு அப்பாற்பட்ட நம்பகத்தன்மை, ஆழமான இணைப்பு மற்றும் அன்பான இதயத்தை மதிக்கும் ஒருவருக்காக அவள் அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறாள். அவளுடைய ஆழத்திற்கு நீங்கள் தயாராக இருந்தால், மற்றவர்களைப் போலல்லாமல் நீங்கள் ஒரு தனித்துவமான அன்பை அனுபவிப்பீர்கள். வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது. #🚹உளவியல் சிந்தனை
கணவனாக இருக்க தகுதி அற்ற ஆண் யார்...??
தனது கற்பை மனைவி அல்லாத வேறு ஒருத்திக்கு கொடுக்கும் ஆண்.
எப்போதும் சந்தேகத்துடன் இருக்கும் ஆண்.
மனைவியின் பேச்சை மதிக்காத ஆண்.
பிடிவாதமாக இருக்கும் ஆண்.
வீட்டை பராமரிக்காத ஆண்.
மனைவியை அன்பால் அரவணைக்காத ஆண்.
மனைவியின் வருமானத்தில் திருப்தி அடையாத ஆண்.
மனைவிக்கு ஊத்தையாகவும், அந்நிய பெண்ணுக்கு சுத்தமாகவும் நடக்கும் ஆண்.
மனைவிக்காக சமைத்துத் தானும் சாப்பிடாத ஆண்.
மனைவியின் அனுமதி இல்லாமல் வீட்டு வாசலை தாண்டும் ஆண்.
மனைவியை விட சத்தமாக பேசும் ஆண்.
தன் மனைவியின் தகுதியை விட, தகுதியான பெண்கள் பற்றி பெருமை பேசும் ஆண்.
எப்போதும் மனைவியிடம் சண்டை போடும் ஆண்.
மனைவியின் தாயை மதிக்காத ஆண்.
தன் வயிறு நிறைய சாப்பிடாத ஆண். (தான் சாப்பிட்டால்தான் மனைவிக்கு சாப்பாடு தருவான்.)
மனைவியிடம் எப்போதும் விட்டு கொடுத்து பேசாத ஆண்.
குறை பேசும் கணவன்.
சிரிப்பும் புன்னகையும் மரியாதையும் இன்றி மனைவியை வரவேற்கும் ஆண்.
வெட்கம் இல்லாத ஆண்.
அடிக்கடி மனைவியை வீட்டை விட்டு விரட்டும் ஆண். (நாம வாழ்றது அவன் அப்பா கட்டின வீடு தானே.)
மார்க்க கல்வி இல்லாத ஆண்.
பொறாமை குணம் கொண்ட ஆண்.
குடும்ப உறவை துண்டித்து வாழும் ஆண்.
இந்த குணம் மற்றும் செயல்கள் உள்ள ஆண்கள் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும். ஒரு பெண் அவமதிக்கப்படும், வேதனை அடைவதற்கான காரணம் இதுவே. #🚹உளவியல் சிந்தனை
என் நித்திரையை கலைத்துவிட்டு
நிம்மதியாக உறங்குகிறாய்...என் நிம்மதியை கலைத்து
நித்திரையை தொலைக்க செய்த
உன் நினைவுகளை நான் எப்படி தண்டிப்பது.
நகர்ந்து செல்லும் உன் நினைவுகளுடன்
கடந்து செல்கிறேன் என் நிமிடங்களை...
தொலைந்து போன என் சுவடுகளை
சுவடே இல்லாமல் தேடுகிறேன்
என் பயணங்களில்.
நீ தேடுவாயென்றால் தொலைந்து போக ஆசைதான்...நீ தேட மறந்து தொலைந்திடுவேனோ .. என்ற பயமே இன்னும் நான் தொலையாமல் இருக்கிறேன்.
நான் சொல்லாமலே புரிந்துகொள்ளும் உனக்கு நான் சொல்லித்தான் புரிய வேண்டுமென்றால் உனக்கு புரியாமலே
இருந்துவிட்டு போகட்டும்.
#💞Feel My Love💖
உடலமைப்பில் ஆண்களைக் காட்டிலும் பெண் அழகானவள் அல்ல,
உண்மையில் எல்லா உயிரினங்களிலும் ஆணுக்குத்தான் அழகும் கம்பீரமும் அவசியம்.
பெண் அறிவானவள்,எல்லாச் சூழலிலும் தன்னை தகவமைத்துக் கொள்வாள், உடலாலும், மனதாளும் ஆண்களைக் காட்டிலும் அதிகம் வலிமையானவள்.
இதிலிருந்து நழுவிக்கொண்டோம்,
பெண்களை நோக்கியே,அத்தனை அழகு சாதனங்களும் விற்கப் படுகிறது.
இணையைக் கவர வேண்டிய அவசியம் ,எல்லா உயிர்களிலும் ஆணுக்கு மட்டுமே உண்டு.
மனிதப் பதர்கள் மட்டுமே ,பெண்ணை அழகுப் பதுமையென,
அலங்காரப் பொம்மையென கவர்ச்சி காட்டும் நங்கையென, கல்லாக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்..
#💞Feel My Love💖
அலட்சியம்....
எங்கே போய்விடப்போகிறது?
எங்கே போய்விடப்போகிறாள்?
எங்கே போய்விடப்போகிறான்?
என்ற அதிக பட்ச அலட்சியம் தான்,
பல விடயங்களை தொலைப்பதற்கும்,
பல பெரிய பிரிவுகளிற்குமான,
முதல் ஆணிவேர்!
உண்மை என்னவென்றால், யாரும் யாருடனும்,
எப்பொழுதும்,
எந்த கணத்திலும் கூடவே வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,
அப்படி ஒருவர் நம்மோடு இருக்கின்றார் என்றால்,
நாம் அவரை நன்றாக நடத்துகின்றோம் என்று தான் பொருள் கூற வேண்டும்!
உண்மையில்,
என்ன நடந்தாலும் இவர் என்னோடு இருப்பார்,
என்னை விட்டுச்செல்ல மாட்டார் என்பது மடத்தனம்!
இவள் எங்கே போய்விடப்போகிறாள்/ன் என்ற உங்கள் அசட்டு தனம்,
உங்களுக்காக இருப்பவர்களின் நேரத்தை வீணடிக்கிறது,
காரணமே கூறாமல் அவர்களை காத்திருக்க வைக்கிறது,
ஒரு கட்டத்தில், எத்தனை அன்பு இருந்தால் கூட,
உங்களை மெதுமெதுவாக அவர்கள் வெறுக்கத்துவங்குவார்கள்!
ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று கூறி,
ஐந்து மணிநேரமாக காணாமல் போனவர்களை,
கடந்திருக்கிறேன் நான்,
காரணம் எல்லாம்,
மறதியும், பிற வேலையும், பிற நட்பும்!
மறக்கும் அளவில் மதிப்பளிக்க முடியாத மனிதர்கள் என்று இங்கு யாரும் இல்லை,
உங்களுக்காக ஒருவர், பொக்கிஷமாய் தரும் நேரத்தை, மதிக்க தெரியாமல் மிதிப்பதற்கு பெயர்,
அன்பல்ல,
இவனாலோ, இவளாலோ என்னை விட்டுச்செல்ல முடியாது என்ற அலட்சியம்!
யாரும் யாரையும் விட்டுப்போகலாம்,
யாரும் யாருடனும் சேரலாம்,
அந்தந்த மனிதர்கள் நம்மோடு எப்படி உணர்கின்றார்கள் என்பதை பொறுத்தே தான்,
பிரிதலும் சேர்தலும் அன்றி,
எப்பொழுதும் கூடவே வருவார்கள் என்றெல்லாம்,
எழுதப்பட்ட விதிகள் இல்லை!
முதலில் ஒருமாதிரி,
இடையில் வேறோர் மாதிரி,
பின்பு ஏதோ மாதிரி மாறிக்கொண்டிருக்கும் உங்கள் fluctuated prioritisation குணவியல்புகளை தாங்கிக்கொள்ளும் பக்குவங்கள் உண்மையில்,
அடிப்படையில்,
மனித மனங்களிற்கு இல்லை,
ஒரு சில வேளைகளில் அவை சாத்தியப்பட்டாலும்,
வாழ்வு என்ற நீண்ட பயணத்தில் என்றோ ஒரு நாள் அது பிளவிற்கு உட்படத்தான்செய்யும்!
திமிர் என்ற விடயம் அழகானது,
இல்லை என்பதிற்கில்லை,
ஆனால் அன்பின் நிமித்தங்களாய் உருவாகும்,
அலட்சியப்போக்கு,
அருவருக்கத்தக்கது ;
ஏற்றுக்கொள்ள முடியாதது!
ஆக,
உங்களுடன்
அன்பாக,
அக்கறையாக,
பாசமாக யாரும் இருந்தால்,
அவர்களின் பொன்னான நேரத்தை உங்களிற்காக தந்தால்,
தர முன்வந்தால்,
அவர்களை மதியுங்கள்,
அவர்களின் முயற்சியை பாராட்டுங்கள்,
காரணம்,
அலட்சியத்தால் நீங்கள், ஒருவரின் அன்பினை இழந்தால்,
அவை வாழ்நாளில் மீளப்பெற முடியாத இடத்திற்கு சென்றுவிடும்,
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன,
செய்யாவிட்டால் என்ன?
மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்,
உங்கள் குழந்தைகளிற்கும் கற்றுக்கொடுங்கள்!
🙏🙏🙏 #🚹உளவியல் சிந்தனை












