ShareChat
click to see wallet page
search
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 பற்றிய சில ஆச்சர்யமான தகவல்கள்! நமது உள்ளங்கையில் மறைந்திருக்கும் ரகசியங்கள்! (பல இணைய தள முகவரிகளில் படித்த விபரங்களை தொகுத்து பதிவிட்டுள்ளேன். இது கொஞ்சம் பெரிய பதிவு என்பதால் பொறுமையாக கடைசி வரை படிக்கவும்.) தினசரி காலை எழுந்த உடன் அவரவர் இரு கரங்களையும் சேர்த்து உள்ளங்கையை காணவும். உள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் அவர் வீட்டில் மங்களம் பெருகும். உள்ளங்கையில் சக்தி, சரஸ்வதி, லட்சுமி, என மூன்று அன்னையரும் வந்து தங்கும் மையமாகும். தினமும் காலையில் இவர்களை நினைத்து உள்ளங்கையை பார்த்தால் கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் நமக்கு கிடைக்கும். குளிக்கும்போதும், தலையில் எண்ணெய் தேய்க்கும் போதும் தவிர்த்து மற்ற எந்த நேரங்களிலும், எந்த காரணம் கொண்டும் தலையில் உள்ளங்கையை வைக்க கூடாது . அப்படி வைத்தால் நாம் பெற்றுள்ள கர்ம வினை பாவங்கள் பெருகிவிடும். அந்த வினை நம்மை வீழ்ச்சி அடைய வைக்கும். எனவே உள்ளங்கையை தலையில் படும்படி சூரிய நமஸ்கார வேளை, குளியல் வேளை, எண்ணெய் தேய்க்கும் போது தவிர மற்ற வேளையில் வைக்கவே கூடாது . ஆண்களுக்கு வெள்ளிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது. பெண்களுக்கு சனிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது . செவ்வாய்கிழமை யாருக்குமே சூரிய நமஸ்கார வேளைக்கு பிறகு உள்ளங்கை தலையில் படக்கூடாது. அதற்கு முன் படலாம். பொதுவாக சூரிய உதயத்திற்கு முன் உள்ளங்கை தலையில் பட்டால் தோஷமில்லை. சூரிய உதயத்திற்கு பின்பு அவசியமான காரணமின்றி உள்ளங்கை தலையில் படாமல் பார்த்துக் கொள்ளவும். இரவில் உறங்கும்போது கூட தலையில் கை வைக்காமல் தூங்குவதே சிறந்தது. தலையில்,கன்னத்தில் காதில் உள்ளங்கை படும்படி வைத்து படுத்துறங்கினால் எந்நிலையில் உள்ளவராயினும் தரித்திரம் பிடிக்கும். எனவே கவனம்தேவை . காலை எழுந்ததும் உள்ளங்கைகளை கண்களால் பார்த்து வணக்கத்துடன் ஒற்றிக்கொள்ளும் முறையை தொடர்ந்து செய்து வர மகா அதிஷ்டசாலியாக வருவீர்கள்! பூமியில் தோன்றுகிற அனைத்தும் இந்த பூமிக்கே சொந்தம். அன்னை பூமாதேவி அனைத்தையும்ஆளக்கூடியவர், தாங்கக்கூடியவர். எந்த சக்தியையும் இழுக்கக்கூடியவரும் இவரே . இந்த உலகில் அழியும் தன்மை உடைய எதுவும் மண்ணுக்கே போகும். மண்ணில் விளைந்ததை உண்டு வாழும் மனிதனாயினும் இறந்தபின்பு மண்ணுக்கே சொந்தம். நமது உடலில் ஆத்மா என்னும் நாராயணன் உள்ள வரைதான் பூமாதேவி மனிதனை தின்னாமல் விட்டு வைப்பார். (நமது உடலை விட்டு ஆத்மா பிரிந்த பின்பு உடல் எரிந்தாலும் சாம்பல் மண்ணில்தான் புதைய வேண்டும்) . அன்னை பூமாதேவி சத்தியத்திற்கு கட்டுப்பட்டவள். எதையும் நாம் கொடுக்காமல் நம்மிடமிருந்து எடுக்கமாட்டாள். வான சக்தியை மட்டும் நாமறியாமலேயே எடுத்துக்கொள்வார். (அதனால் தான் பிரபஞ்ச சக்தி ஆற்றல்களை பெற்றவர்கள் பாத அணி இல்லாமல் நடக்க மாட்டார்கள்) அன்னை பூமாதேவிக்கு நமது சக்தியை நாமாகக் கொடுக்கக்கூடியதான ஒருமுறை உண்டு. அது நம் இரு உள்ளங்கையையும் பூமியில் நன்கு பதியும்படி வைத்து அழுத்தினாலே நம்மிடம் உள்ள சக்திகளை அன்னை பூமாதேவி எடுத்துக் கொள்வார். அது பாவ சக்தியானாலும் சரி. தர்ம சக்தி ஆனாலும் சரி, ஞான சக்தி ஆனாலும் சரி அன்னை பூமாதேவி நம்மிடமிருந்து எடுத்துக் கொள்வார், ஆனால் ஒட்டு மொத்தமாக நம்மிடமிருந்து எடுக்காமல் கொஞ்ச கொஞ்சமாக தர்மத்திற்கு கட்டுப்பட்டவர் போல் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்வார். செய்த பாவத்தினால் அதிகமாக சிரமப்படுபவர்கள் ஆலயத்தில் இரு உள்ளங்கையையும் வைத்து தன் பாவத்தை இறக்கி கொள்ள ஒரு கல்லை பூமியோடு பதித்து வைத்திருப்பார்கள், அதற்கு பலிபீடம் என்று பெயர். இது நமது கர்ம வினை பாவத்தையெல்லாம் பலி செய்யக்கூடிய இடமாகும். மனதால் விடமுடியாத பாவங்களை நமது உள்ளங்கை மூலம் பூமியில் விடமுடியும். மனதால் தாங்க முடியாத துன்பத்தை நமது உள்ளங்கையால் பூமிக்கு கொடுத்து ஆறுதல் தேட முடியும். எனவே ஆலயங்களில் இந்த பலிபீடகல் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும், எனவே ஆலயம் சென்றவுடன் ஆலயத்தில் இரு உள்ளங்கையையும் வைத்து உங்களது பாவத்தை இறக்கி கொள்ள பூமியோடு பதித்து வைத்திருக்கும் கல்லில் (பலிபீடத்தில்)உங்களது உள்ளங்கைகளை வைத்து பாவத்தை இறக்கிவிட்டால் மீண்டும் ஆலயம் விட்டு வீடு திரும்பும் வரையில் வேறு எங்கும் உங்களது உள்ளங்கைகளை வைக்கக்கூடாது. ஏனென்றால் உங்களது உள்ளங்கை அவ்வளவு சக்தி நிறைந்துள்ளதாக மாறி இருக்கும். அதே போல சாப்பிடும்போது நமது கையை குறிப்பாக உள்ளங்கையை பூமியில் ஊன்றி சாப்பிட்டால் நமது சத்து முழுக்க பூமியில் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும், அதே போல் ஆலயத்தில் சாமி கும்பிட்டபின் கொடிமரத்தின் முன்பாக விழுந்து கும்பிட்டு இரு உள்ளங்கையையும் பூமியில் ஊன்றி எழுந்தால் அந்த ஆலயத்தில் பெற்ற சக்திகள் அனைத்து பூமியால் உறிஞ்சப்பட்டு வெறும் ஆளாய் வீட்டிற்கு வருவோம். (கொடி மரத்தின் முன்பு விழுந்து கும்பிடும்போதும். இரு உள்ளங்கையும் ஒன்றோடு ஒன்று ஒட்டினார்போல் கை வைத்து வணங்கி பின் கால் பலத்தால் எழலாம் அல்லது கை விரல்களின் பின்முட்டியால் ஊன்றி எழலாம்) பல புண்ணிய ஆலயங்களுக்கு நம்மில் பல பேர் சென்று வந்தாலும் புண்ணிய பலன்கள் கிடைக்காமல் போவதற்கு காரணம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆலயத்தில் கொடிமரம் முன்பாக விழுந்து வணங்கி உள்ளங்கைகளை ஊன்றி எழும்போது அந்த ஆலயத்தில் பெற்ற புண்ணிய சக்திகளை பூமிக்கு தாரை வார்த்து கொடுப்பதே இதற்கு காரணமாகும். மங்களவன் என்னும் செவ்வாயின் இடம் இந்த உள்ளங்கை தான்.எனவே அதில் எதை செய்தாலும் மங்களம் பெருகும். ஆலயத்தில் வழங்கப்படும் பூ,விபூதி,சந்தனம்,குங்குமம், தீர்த்தம் மற்றும் பிரசாதம் அனைத்தையும் உள்ளங்கைகளில் தான் வாங்குகின்றோம். தீர்த்தம்,பிரசாதம் ஆகியவற்றை உள்ளங்கைகளில் வைத்துதான் சாப்பிடுகிறோம். ( நுனி விரலால் வாங்கி சாப்பிடமாட்டோம்,அப்படி செய்தால் அது தவறு ) விபூதியை விரலால் எடுத்து இட்டுக் கொள்ளாமல் அப்படியே எடுத்து பூசிக் கொள்வதும், சந்தனம்,குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் வைக்கும் பழக்கமும் உண்டு. இன்றைய காலத்தில் நெற்றி நிறைய விபூதி பூசினால் முக அழகு போய்விடும் என நினைத்து மோதிர விரலால் சிறிதளவு விபூதி எடுத்து வைத்து நெற்றியில் பூசிக்கொள்வதன் மூலம் உள்ளங்கையின் அளப்பரிய சக்தியை பெற பலரும் தவறுகின்றனர், பிரசாதம் மற்றும் தீர்த்தம் மட்டும் தான் உள்ளங்கையால் சாப்பிடுகிறார்கள். உள்ளங்கை மூலம் அன்னை பூமாதேவி நமது சக்தியை உறிஞ்சி விடுவாள் என்பதால்தான் அநாவசியமாக பூமியின்மீது சத்தியம் அடித்து செய்யக்கூடாது என்பார்கள், மேலும் அன்னை பூமாதேவி உள்ளங்கை மூலம் நமது சக்தியை உறிஞ்சி கொள்வதை தடுக்கும் சக்தி நம்முடைய மோதிர விரலுக்கு மட்டுமே உண்டு என்பதை கண்டுபிடித்த நம் முன்னோர்கள் மோதிர விரலில் ஒரு கட்டு இருந்தால் நம் உள்ளங்கை பூமியில் பட்டாலும் சக்தி விரையமாகாது என்பதை கண்டுணர்ந்தனர். இதனால்தான் மோதிர விரலில் மோதிரம் அணியும் முறையை கொண்டு வந்தனர். . மேலும் மோதிர விரலில் கட்டு இல்லாமல் ஆகாய சக்திக்கு நாம் எதையும் கொடுக்க முடியாது என்பதால் தான் நமது பித்ருக்களுக்கு எள்நீர் தானம் கொடுக்கும்போது மோதிர விரலில் தர்பையால் பவித்ரம் (மோதிரம்) அணியும் முறையும் கொண்டு வந்தார்கள் . இதே போன்று கை மணிக்கட்டில் கட்டுப் போட்டாலும் பூமி நம் சக்தியை உறிஞ்சாது என்பதால் பெண்களுக்கு கைகளில் வளையல் அணியும் முறையை கொண்டு வந்தார்கள். பூமா தேவி நம் சக்தியை உள்ளங்கை மூலம் உறிஞ்சுவதால் நமது பாவம் மட்டும் போனால் பரவாயில்லை, புண்ணியமும் சேர்ந்து போய்விடுகிறது என்பதுதான் இதிலுள்ள பிரச்சனை. எனவே தான் பெரியவர்கள் ஆண்களுக்கு மோதிர விரலில் ஒரு வளையமும்,பெண்களுக்கு கை மணிக்கட்டில் வளையலும் இருக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தார்கள். நமது சக்திகளை தூண்டக்கூடியதும் வெளியேற விடாமல் தடுக்கக் கூடியதும் மோதிர விரலே. அதற்கு நிலம் என்றும் சூரியன் என்றும் பெயர் உண்டு, பெண்களுக்கும் ஆண்களுக்கும் கால் மோதிர விரலில் மெட்டி அணியும் பழக்கமும் இந்த மோதிர விரல் கை பழக்கத்தால் வந்ததே. எனினும் உள்ளங்கால் பூமியில் பதிவதால் பூமியானது சக்தியை ஆன்மிக சக்தி பெற்றவரிடமிருந்துதான் உறிஞ்சும், சாமான்யரிடம் உறிஞ்சாது எனவேதான் சாமான்யர்கள் ஏதாவது ஒரு காலில் கருப்பு கயிகை கால் மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள், அல்லது மெட்டி போட்டுக் கொள்வார்கள் அல்லது வசதி இருக்கப்பட்டவர்கள் கையில் மோதிரம் அணிந்து கொள்வார்கள், இன்று நாகரிக விஷயமாக பலமாற்றங்கள் உண்டானாலும் பூமி நமது சக்தியை குறிப்பாக சுப சக்தியை உறிஞ்சாமல் பாதுகாக்கவே இப்பழக்கமெல்லாம் உருவாக்கப்பட்டதாகும் . ஆலயத்தில் பலிபீடம் மூலம் நமது பாவத்தை போக்க முயற்ச்சித்தாலும். பலிபீடத்தில் சத்தியம் செய்வதானாலும், மாந்திரிக சக்தி வேலை செய்ய வேண்டுமென்றாலும் நமது கை,கால்,மணிக்கட்டுகளில் எந்த தடைகளும் (மோதிரம்,வளையல்,கறுப்பு கயிறு,மெட்டி போன்றவை) இருக்கக் கூடாது.அவ்வாறு இருந்தால் பலன் கிடைக்காது . பொதுவாக பெண்கள் மெட்டியை கழட்டுவதற்கு அஞ்சுவார்கள். அதனால்தான் அக்காலத்தில் புது மெட்டி மாற்றும் தருவாயில் ஆலயத்தில் பலிபீடம் முன்பு பிராத்தனை செய்து வணங்கி பின் புது மெட்டியை அணிந்து கொள்வார்கள். எல்லோரும் இந்த முறையை தற்போதும் கடைபிடிக்கலாம், கைகளில் சூரிய விரலில் (மோதிர விரலில்)மோதிரம் இருந்தால் எதிரியின் மாந்திரிக சக்தி கூட அவ்வளவு எளிதில் நம்மில் வேலை செய்யாது . மணிக்கட்டில் செம்பினால் ஆன ஒரு வளையம் அணிந்திருந்தால் ஒருவர் விட்ட சாபம் கூட நம்மை எளிதில் அண்டாது. இது ஆண்,பெண் இருவருக்கும் பொருந்தும், பெண்கள் காலில் தண்டை அல்லது கொலுசு அணிவதால் மாந்திரிக சக்தியினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம். இதனால்தான் அக்காலத்தில் ஒரு காலிலாவது வசதிக்கேற்றவாறு தண்டை அணியும் பழக்கம் இருந்தது , நமது உள்ளங்கை ஒரு வசிய பீடம் போன்றது. நாம் ஒருவரோடு ஒருவர் கை குலுக்கினால் கூட இருவருக்குமிடையே சக்தி பரிமாற்றம் உண்டாகும். ஒருவர் கோபமாக இருக்கும்போது கை குலுக்கினால் வக்ர குணம் உண்டாகும், அன்பாய் குலுக்கினால் நட்பு வசியமாகும், அதே போல் தூங்கும்போது கன்னத்திலோ. தலையிலோ உள்ளங்கை வைத்தால் மூதேவி நம்மிடம் குடிகொள்வாள். அதுவே யோசனை செய்யும்போது உள்ளங்கையினை தலையில் வைத்தால் ஞானம் பெருகும், சூரியனுக்கு நேராக நம் உள்ளங்கையை காண்பித்து பின் உச்சந்தலையில் வைத்தால் சூரியனின் ஆற்றல் சக்தி நமக்குள் உண்டாகும். உள்ளங்கையில் தண்ணீர் ஊற்றி ஆசீர்வதித்தாலும் பலிக்கும்,சாபம் கொடுத்தாலும் பலிக்கும், ஏன் இந்த உள்ளங்கைக்கு மட்டும் இத்தனை சக்தியென்றால் முப்பெரும் தேவியரும் சங்கமிக்கும் இடம் இவ்விடமே. பூமாதேவியுடன் நமது உள்ளங்கை இணையும்போது நமது உடல் சக்தி உறிஞ்சப்படுவதால் நமது உள்ளங்கையில் நிறைந்திருக்கும் இந்த முப்பெரும் தேவியரின் சுப சக்திகளையும் நாம் இழக்க நேரிடும் என்பதால் கவனமாக இருக்கவும். நமது உள்ளங்கை யார் தலையில் படுகிறதோ அது தீட்சையாகும், அதனால்தான் அநாவசியமாக யார் தலையிலும் கை வைக்கவோ, விடவோ கூடாது என்பார்கள். நமது உள்ளங்கையில் விட்டு குடிக்கும் நீர் கூட நோயை போக்கும் சக்தியை கொடுக்கும் மந்திர நீர் ஆக மாறும். தர்மம் கூட ஒருவரின் உள்ளங்கையில் இட்டால் கொடுத்தவரைவிட வாங்கியவருக்கு சக்தி போய்விடும் அதனால் தான் பாத்திரத்தில் தான் பிச்சை இட வேண்டும், கையில் தரக்கூடாது என்பார்கள், ஒரு தாயின் கையால் நம் உள்ளங்கையால் அன்னம் வாங்கி சாப்பிட்டாலோ. பணம் பெற்றாலோ அதன் சக்தி பன்மடங்காக பெருகும் என்பதால் தாயின் கையால் வாங்கி சாப்பிடுவார்கள். காரணம் சக்தி கூடும் என்பதால் தான் (இந்த ரகசியத்தை அறிந்த காலத்தில் வெறும் கையாலே அன்னமிடும் பழக்கம் இருந்தது) அன்னவெட்டியெல்லாம் அன்னியருக்குத்தான். இன்று உள்ளங்கையின் மகத்துவம் புரியாமல் எல்லாமே ஸ்பூனாகி போனது. எவர் கையால் நாம் உணவு வாங்கி சாப்பிட்டாலும் நாம் அவருக்கு துரோகம் செய்தால் நாம் அழிந்து போவோம், காரணம் உள்ளங்கை சத்தியத்திற்குரியது. அதனால் அன்னம் இடும்போது அந்த உள்ளங்கையால் எடுத்த அன்னத்தில் சத்தியம் கலந்திருப்பதால் நாம் அன்னம இட்டவருக்கு கட்டுப்பட்டவராவோம். அதனால் அவர் இடும் சாபமோ நாம் அவருக்கு செய்யும் துரோகமோ நமக்கு துன்பத்தை தருகிறது. இந்த சக்தி தாய்க்கு அதிகம் இருக்க காரணம் தன்பிள்ளைகளுக்கு அதிகமாக அன்னம் படைக்கும் வாய்ப்பும், தலையில் கை வைக்கும் வாய்ப்பும் அதிகமாக ஒரு தாய்க்கே கிடைக்கிறது . அதனால் தான் தாய் மகனை சபித்தால் அது அப்படியே பலிக்கிறது . இவ்வளவு மகத்துவம் மிக்க உள்ளங்கை பூமியில் பட்டால் மட்டும் அனைத்தும் பறிபோய்விடும். ஏன் தெரியுமா?இந்த உடல் வளர்ந்தது இந்த பூமியால்தான். நம்மை சுமப்பதும் இந்த பூமிதான். எனவே நம் சக்தியை உறிஞ்சும் அத்தனை உரிமையையும், பூமாதேவிக்கு உண்டு. எனவே இந்த சக்தியை கொடுப்பதும் தக்க வைத்துக் கொள்வதும் நம்மிடம்தான் உள்ளது . பூமியில் உள்ளங்கை பதியும் போது (ஆலய பலிபீடம் தவிர்த்து மற்ற இடங்களில்) முதலில் நம்மிடம் இருந்து வெளியேறுவது மங்களகரமான சக்திகளே. காரணம் பூமாதேவிக்கும் மங்களசக்தி மகாலக்ஷ்மிக்கும் நெருங்கிய உறவு உண்டு. இதுவே காரணமாகும். கடைசியாக நமது கையில் உள்ள விரல்களைப்பற்றி ஒரு கொசுறு தகவல்: நமது விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம்,இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும். நடு விரல் என்று சொல்லப்படும் பாம்பு விரல் உங்களை பற்றி குறிப்பதால்,நடு விரலில் மோதிரம் அணிந்தால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நீங்களாகவே தடைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று பொருள். மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? நம் ஐந்து விரல்களுமே, நமது ஐந்து சொந்தபந்தங்களை குறிக்கின்றன அதாவது பெரு விரல் (கட்டை விரல்) உங்களது பெற்றோரை பற்றி குறிக்கின்றது. (இந்த கட்டை விரலின் துணையில்லாமல் மற்ற நான்கு விரலாலும் தனித்து எந்த காரியமும் செய்ய முடியாது) இந்த கட்டைவிரலில் மோதிரம் அணிவதால் , உங்களால் கையாள இயலாத, குறிப்பிட்ட விதமான சக்திகளை உங்களை நோக்கி நீங்கள் ஈர்க்கும்படி நேரும். உங்களை அது உலுக்கிப் போடலாம். நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது, கட்டை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் அது குறிப்பிட்ட விதமான சில சக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும். அதனால் உங்கள் வாழ்க்கையே உலுக்கப்படலாம். குறிப்பாக, நீங்கள் கட்டைவிரலில் மோதிரம் அணிந்திருந்தால்,நீங்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். கட்டை விரல்ஙஉங்களது பெற்றோரை பற்றியும், ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை பற்றியும், நடு விரல் உங்களை பற்றியும், மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை பற்றியும்,சிறிய விரல்(சுண்டு விரல்) உங்களின் பிள்ளைகளை பற்றியும் குறிக்கிறது. உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக ஒட்டி இருக்கும்படி செய்யுங்கள். உங்களைப்பற்றி குறிக்கும் நடு விரல்களை மடித்து ஒட்ட வையுங்கள். மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள் இப்போது உங்களது பெருவிரல்களை(கட்டை விரல்களை) பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும். அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள் என்பதை இது உணர்த்துகிறது. பெருவிரல்களை பழையபடி ஒட்டி வைத்து சுட்டு விரல்களை(ஆள்காட்டி விரல்களை) பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும். அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள் என்பதை இது உணர்த்துகிறது. இதுபோல் உங்களின் சிறிய விரல்களை(சுண்டு விரல்களை) பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும். அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள் என்பதை இது உணர்த்துகிறது. ஆனால் உங்களின் மோதிர விரல்களை பிரித்துப்பாருங்கள். பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிர விரலில் மோதிரம் அணிய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது #காலை வணக்கம் #🙏ஜெய் ஆஞ்சநேயா #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ೧ Sowpakna ೧ Sowpakna - ShareChat