ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவவேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.
#Sree Subrahmanya Swami 🙏 #సుబ్రహ్మణ్య స్వామి💐 #Om Saravana Bhava #sri subrahmanya swamy #🙏🦚MURUGA🦚🙏


