திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 72 வது திருத்தலம்
திருக்குடந்தைக்காரோணம்
அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர்
மரம் வில்வம் மகாமகததீர்த்தம்
பாடல் எண் : 9 பண் : தக்கேசி
கரியமாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப்போய்
அரிய அண்டம் தேடிப்புக்கு அளக்க வொண்கிலார்
தெரிய அரிய தேவர்செல்வம் திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே.
பொழிப்புரை:
செல்வம் விளங்கும் குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் கருநிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய் அரிய உலகங்கள் அனைத்தும் தேடிச் சென்றும் அடி முடிகளை அளக்க ஒண்ணாதவராய் உயர்ந்து நின்ற பெரியவர். முனைப்புடையவரால் காணுதற்கு அரியவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். கால காலர்.
குறிப்புரை:
அயனும் மாலும் அறியவொண்ணாத காலகாலர் குடமூக்கின் காரோணத்தார் என்கின்றது. கழறி - ஒருவருக்கொருவர் இடித்துப்பேசி.
#🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்


