🙏 அருமையான சிந்தனைகள்
மண்ணை உழுபவருக்குப் பெண்ணைக் கொடு!
மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு!
பொது வேலையில் ஈடுபடச் சொல்லிக் கொடு.
பொது சேவை செய்பவருக்கு மரியாதை கொடு!
தண்ணீரை சேமிக்க அவசியம் சொல்லிக் கொடு.
தாமதித்தால் பாலைவனமாகும் என்பதைச் சொல்லி விடு.
தாய் தந்தைக்கு நல்லதை மட்டும் செய்.
அவர்கள் தளர்ந்தப் பின் நீ தளராமல் தினமும் செய்.
உனக்காக ஒர் மரம் வை.!
உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை...!
இதை சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை...!
உனக்குக் குழந்தை பிறந்தாலும் மரம் வை...!
பேர் வைத்தாலும் மறவாமல் மரம் வை...!
மகள் பெரியவள் ஆனாலும் மரம் வை!
நாட்டுக்கு நல்லது என நினைத்து மறவாது மரம் வை...!
இச்செயலை நண்பர்களையும் செய்ய வை...!
பசுமையைப் பற்றி சொல்லிக் கொடு!
அதை உருவாக்க இப்பவே முயற்சியை எடு!
பணம்... வசதியாக வாழ அதிகம் தேவை..!
காற்று...நாம் வாழவே அவசியம் தேவை என்பதை மறவாதே...!
மரம் அதற்குத் தேவை...!
நமக்கு இனி இதுவே தேவை!
மறந்தால் நாம் தான் இனி பேதை...!
குளத்தை வெட்டி வை...!
மரத்தை நட்டு வை...!
நிலத்தை உழுது வை...!
தண்ணீரை அவசியம் சேமித்து வை...!
பல்லுயிரும் செழிக்க
பசுமை வேண்டும் என்று இப்போதே சொல்லி வை!
பூமியைக் குளிர்விக்க
நாம் விதைப்போம் ஒரு விதையை....
நம்மைக் குளிர்விக்க அந்த விதை மரமாக வளர்ந்து நமக்கு ஆயுளைத் தரும்!
மரமின்றிப் போனால்...
மனித இனமின்றிப் போகும்!
வாழ்க வளமுடன்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்
00:36

