ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)கள்வனேனானேன் படிறு செய்திருப்பேன்; கண்டவாதிரி தந்தேனேலும் தெள்ளியேனானேன்; செல் கதிக்க மைந்தேன்; சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள்ளெலாமுருகிக் குரல் தழுத் தொழிந்தேன்; உடம்பெலாம் கண்ணநீர் சோர நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணா என்னும் நாமம்.. #நாலாயிரம் 952/4000 பெரிய திருமொழி முதற் பத்து முதல் திருமொழி #திருமங்கை #ஆழ்வார் இது மங்கைமன்னனின் தன்னிலை விளக்கம்.. கள்வனே ஆனேன்.. உன் அடியார்களுக்கு அன்னமிடும் ஆசையால்.. கள்வனே ஆனேன்.. அறியாமையினால் தீங்குகள் செய்தேன்.. நின் திருக்கோயில்களை செப்பனிடும் ஆர்வத்தில் கண்டபடி நடந்திருக்கிறேன்.. ஆனால் இங்கே நான் உன் அடிமையென்பதில் தெள்ளத் தெளிவாய் இருந்தேன்.. அதன் காரணமாய் வீட்டரசு அடையும் தகுதியுள்ளவன் ஆகிறேன்.. உன்னைப் பாடுகின்ற பேற்றினை நான் பெற்றதனால்.. உனது அருளானது.. என்மீது உறுதியாய் இருக்கிறது.. இதனையும் புரிந்து கொண்டேன்.. உன் திருவருள் திவ்யமானது என்பதை புரிந்து வைத்திருக்கிறேன்.. மனம் உருக.. குரல் தழுதழுக்க.. தேகம் முழுவதும்.. வியர்வை மழையில் தினம் நனைய.. உறங்கும் இருளிலும்.. பொருளீட்டும் பகலிலும்.. நாராயணா! நாராயணா! என்ற நாமத்தைச் சொல்லி.. உன்னை அழைத்தபடியே இருப்பேன்.. #கோமான் #பெருமாள்
பெருமாள் - ShareChat