ShareChat
click to see wallet page
search
#இன்று_எடுக்கும்_முடிவ_உங்கள் #குடும்பத்தின்_தலையெழுத்தையே_மாற்றும் மனித சமுதாயத்தின் வரலாற்றை கூர்ந்து கவனித்துப் பார்த்தால், பணம் தான் அனைத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்கிற ஒரு முக்கியமான எளிய உண்மை நமக்குத் தெளிவாகப் புரியும். இந்த எளிய உண்மை புரியாமல், அல்லது புரிந்தாலும் அதற்குத் தகுந்த நேரடி நடவடிக்கை எடுக்காமல், எதன் எதன் பின்னாலோ மனிதன் ஓடிக்கொண்டிருக்கின்றான். தான் மட்டும் ஓடினால் பரவாயில்லை. தனது மகன், மகள், பேரன், பேத்தி என்று தன்னுடைய சந்ததியையும் அதே ஓட்டத்தில் இணைத்துவிடுகின்றான். ஒரு நிரலிடப்பட்ட இயந்திரம் (Programmed Machine) போல, தலைமுறைகள் தாண்டி, திரும்பத் திரும்ப ஒரே வாழ்க்கை முறையை, ஒரே பொருளாதார முறையை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்து வருகின்றான். நமது தாத்தா இப்படித்தான் இருந்தார். நமது அப்பா இப்படித்தான் இருக்கின்றார். அப்படியானால் நாமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த கேள்வியும் கேட்காமல் வாழ்ந்து முடித்தவர்கள் அதிகம். ஆனால் மிக மிகச் சிறிய அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் ஒரு கேள்வி கேட்டார்கள். "நான் ஏன் என் முன்னோர்களைப் போல இப்படியே இருக்க வேண்டும்?" இந்த ஒரு கேள்வி தான் அவர்களின் வாழ்க்கையை மாற்றியது. இவர்கள் மக்களோடு, மக்களாக சமூக ஓட்டத்தினூடே ஓடவில்லை. மாறாக எதிர் திசையில் பயணித்து தனியே ஓட்டத்தை உருவாக்கினார்கள். இவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்யவில்லை. பணத்தை அவர்களுக்காக வேலை செய்ய வைத்தார்கள். ஒரு தலைமுறையின் தியாகம், ஒரு தலைமுறை எடுத்த துணிச்சலான முடிவின் விளைவாக, இன்று அவர்களது சந்ததிகள் பல தலைமுறைகள் பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமின்றி சுகபோகமாக வாழ்கின்றனர். இவர்களால் மட்டும் எப்படி இது சாத்தியமானது? காரணம் நாம் ஒரு முக்கியமான அமைப்பை புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்.. அது தான் வங்கி (Bank). இதை சமகாலத்திற்கு ஏற்றவாறு புரிய வைக்க முயற்சிக்கின்றேன். என்று வங்கி உருவானதோ, அன்றிலிருந்து இன்று வரை, வங்கி தான் மனிதனை ஆள்கின்றது. மனிதன் பணத்தை பயன்படுத்துகின்றான் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் பணம் தான் மனிதனை பயன்படுத்துகின்றது. மீண்டும் தெளிவாக நினைவுபடுத்துகின்றேன். ராமன் ஆண்டாலும்.இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று கூறுவதைப் போல சமகாலத்தில் உங்கள் கண்கள் காண மன்னர் ஆண்டாலும் , பிரதமர் ஆண்டாலும், முதல்வர் ஆண்டாலும், ஐனாதிபதி ஆண்டாலும். இவ்வளவு ஏன் இறைவனே நேரடியாக வந்து ஆண்டாலும் சரி, இவை அனைத்தும் கண் துடைப்பு தான். உண்மையிலே உங்களை ஆட்சி செய்வது பணம் தான்.. பண அமைப்பை கட்டுப்படுத்துபவர்களின் தாக்கத்தை விட இங்கு வேறு எதுவும் பெரியல்ல. ஏனெனில், பணத்தை கட்டுப்படுத்துபவர்கள் தான் உண்மையான ஆட்சியாளர்கள். பணத்தை கட்டுப்படுத்துபவர்கள் தான் பொருளாதாரத்தையும் (Economy) கட்டுப்படுத்துகின்றார்கள். பொருளாதாரத்தை கட்டுப்படுத்துபவர்கள் தான் மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றார்கள். உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தை வங்கிகளில் வைத்திருக்கின்றார்கள். என்ன நினைப்பில் இதை செய்கின்றார்கள்? "என் பணம் பாதுகாப்பாக இருக்கின்றது" என்கிற எண்ணத்திலே இதை செய்கின்றார்கள். ஆனால் இவர்கள் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், பணம் வங்கியில் செலுத்திய பிறகு பணத்தின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. விரும்பும் நேரத்தில், விரும்பும் முறையில், விரும்பும் அளவில், உங்கள் விருப்பம் போல கோடிக்கணக்கில் பணத்தை போட்டு விட்டு அதை நொடிப் பொழுதில் எடுக்க முடியாது. ஒரு நாளில் இவ்வளவு ரூபாய், atm card மூலம் இவ்ளவு ரூபாய், gpay மூலம் இவ்வளவு ரூபாய் என அனைத்திற்கும் ஒரு. வரையறை உள்ளது. பணத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள், விதிமுறைகள் என அனைத்தயும் வங்கி அமைப்புகள் தான் தீர்மானிக்கின்றது. இதற்கு ஒப்புதல் வழங்குவது போல் நடிப்பது தான் மத்திய அரசு. மத்திய கட்டுப்பாட்டு அமைப்புகள் (Central Systems) மூலம் தான் பணம் சார்ந்த அனைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது பொதுவான நம்பிக்கை. இந்த நிலையில். பணம் உண்மையில் யாருடையது? மக்களுடையதா? அல்லது அமைப்புகளுடையதா? என்கிற ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. இந்த கேள்விக்கான பதிலைத் தேடும் போது, சட்ட திட்டம், சூழல் என சமகாலத்திற்கு ஏற்றவாறும், முயற்சி செய்தால் நாமும் செய்யலாம். நம்மாளும் முடியும் என்று சொல்லக்கூடிய அளவில் ஒன்று உள்ளது என்றால் அது தான் குடும்ப வங்கி (Family Bank). குடும்ப வங்கி என்றால் என்ன? ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, தங்களுடைய பணத்தை ஒன்றாக சேர்த்து, அதை திட்டமிட்டு நிர்வகிக்கும் ஒரு தனி பொருளாதார அமைப்பு. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் மாதம் ₹2000 சேர்த்தால், மாதம் ₹10,000 ஒரு வருடத்தில் ₹1,20,000 இந்த பணத்தை சாதாரணமாக செலவு செய்து முடித்துவிடாமல், ஒரு சொத்தாக (Asset) மாற்றலாம். உதாரணம்: தங்கம் வாங்கலாம். சிறிய நிலம் வாங்கலாம். அல்லது வருமானம் தரக்கூடிய ஏதாவது ஒரு முதலீடு (Investment) செய்யலாம். வாடகை வருமானம் வருவது போன்று ஒரு சொத்தை வாங்கலாம். இந்த சொத்து காலப்போக்கில் மதிப்பு அதிகரிக்கும். அது குடும்பத்தின் நிரந்தர செல்வமாக மாறும். இதே முறையை எண்ணிக்கையில் அதிகமுள்ள மக்கள் செய்ய விரும்பினால், அதற்கு சமூக அறக்கட்டளை அமைப்ூப (Community Trust Structure) பயன்படுத்தலாம். அதாவது, பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு சட்டபூர்வமான அமைப்பை உருவாக்கி, அதில் அனைவரும் உறுப்பினர்களாக இருந்து, ஒன்றாக சேமித்து, ஒன்றாக முதலீடு செய்து, ஒன்றாக வளர முடியும். இந்த முறையில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழும். பணம் வங்கியில் இருக்கும் நிலை மாறும். பணம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை உருவாகும். இதன் மூலம் ஒரு புதிய பொருளாதார சுதந்திரம் (Financial Freedom) உருவாகும். இந்த மாற்றம் ஒரு நாளில் நிகழாது. ஆனால் ஒரு முடிவில் தொடங்கும். அந்த முடிவு ஒரு கேள்வியில் தொடங்கும். "நான் சம்பாதிக்கும் பணம் முழுமையாக என் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?" இந்த கேள்வியை உண்மையாக கேட்கும் மனிதன் தான், ஒரு புதிய பொருளாதார வாழ்க்கையின் முதல் படியை எடுத்து வைத்திருக்கின்றான். இது தான் எங்களுக்குத் தெரியுமே எங்க ஊரில் இதைத் தான் சீட்டு பிடிக்கிறோம் சேரத் தயாரா என்று யாராவது ஒருவர் வந்து தினந்தோறும் கேட்கின்றார் என உங்களில் யாராவது நினைக்கலாம். உண்மைதான் உங்கள் எண்ணம் தவறு இல்லை. அதனால் நீங்கள் கேள்விபட்டதை, அல்லது உங்களுக்குத் தெரிந்ததை சட்ட பூர்வமாகச் செய்வது தான் குடும்ப வங்கி என்று புரிந்து கொள்ளுங்களேன். நம்மில் பலர் செய்யும் தவறு, எனக்குத் தெரியும் என்று சொல்வோமே தவிர எதையும் செய்து பார்ப்பது இல்லை. கேள்விப்படுவோம் செய்யாமல் கடந்து விடுவோம். மேலும் சட்டபூர்வமாக செல்லும் போது உங்கள் நோக்கம் மற்றும் இலக்கைப் பொறுத்து சட்டத்தின் அல்லது அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மானியம் அது இது என்கிற பெயரில் நீங்கள் கற்பனை செய்யாததை விட பல மடங்காகத் திரும்பி வரும். நாமக்கல்லை சேர்ந்த கோழிப் பண்ணை வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் 2 கோடி ரூபாய் கடன் என்று வந்தார். அவரது பிறப்பு அமைப்பின் படி எதை எப்படி செய்ய வேண்டும். எதை செய்யக் கூடாது என்று கூறிவிட்டேன். யோகத்தோடு பிறந்த்திருந்திருத்தாலும், நடுவீட்டில் படுத்து உறங்கினால்? அந்த யோகம் கிடைக்குமா என்ன? அப்படியே கிடைத்தாலும் நம்மிடம் தங்காது. எனவே என்ன நடந்தாலும் நம் உழைப்பு, முயற்சி, திட்டமிடல் சுவாசம் போல இலக்கை அடையும் வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நம் வாடிக்கையாளரிடம் இந்த குடும்ப வங்கி திட்டத்தைப் பற்றி கூறி புரிய வைத்ததேன். அவரது குடும்பத்தில் அப்பா, அம்மா, மனைவி, தங்கை என இவரோடு சேர்த்து மொத்தம் 5 நபர்கள். அவரது குடும்ப சூழலுக்கேற்றவாறு திட்டத்தை அமுல்படுத்தி ஒரு வருடத்தில் 50 லட்சம் கடனை அடைத்துவிட்டேன் என்று சமீபத்தில் அழைத்த போது கூறினார். வேறொரு வாடிக்கையாளரோ நண்பர்களிடத்தில் இந்த முறையை அமுல்படுத்தி மாதம் ஒருவருக்கு கடன் பத்திரம் (bond ) வாங்குகின்றார்கள். உதாரணம் ஒரு கடன் பத்திரத்தின் விலை 1 லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நபர் 10 ஆயிரம் என 10 நபர்கள் 10 ஆயிரம் தரும்போது அது ஒருவரின் பெயரில் கடன் பத்திரமாக மாறிவிடுகின்றது. தனி ஒருவரால் 1 லட்சம் சாத்தியமில்லை என்னும் போது பலர் சேரும் போது அது சுலபமாகிவிடுகின்றது. வணிகம் செய்யும் மூவர் ஒன்று சேர்ந்து தங்களுக்குள்ளே இந்த முறையை அமுல்படுத்தி தங்கள் தேவைகளுக்கு பணம் எடுப்பதும் கொடுப்பதும் என ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியதன் மூலம் தினசரி நான் இவ்வளவு ரூபாய் கட்டியாக வேண்டும் என்கிற நிலையில் இருந்து வந்த கந்து வட்டி சிக்கலில் இருந்து வெளியேறி நிம்மதியாக இருக்கின்றனர். இதைத் தான் பெரியவர்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றனர். இது போல பல அனுபவங்களை கூற முடியும். ஆரம்பத்தில் சற்று சிரமமாகவும் கடினமாகவும் இருக்கலாம். இருக்கும். ஆனால் ஒரு முறை சக்கரம் சுழன்று விட்டால் போதும். உங்களது நிலையே வேறு.தனி உலகத்திற்குள் நுழைந்து விடுவீர்கள். நமது கூட்டு குடும்ப முறையில் இருந்த ஒரு நடைமுறை பழக்க வழக்கம் தான் இது. நாம் ஒற்றுமையாக இருந்தால் நம் குடும்பம் தானே கோடீசுவர குடும்பம். நாம் ஒற்றுமையாக இருந்தால் அவர்களுக்கு வியாபாரம் எப்படி நடக்கும்? விடுவார்களா விளைவு கூட்டுக் குடும்ப முறையை தகர்த்து விட்டார்கள். மீண்டும் நினைவூட்டுகின்றேன். பணத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள், விதிமுறைகள் என அனைத்தயும் வங்கிகள் தான் தீர்மானிக்கின்றது. முழுமையாக நிறைவுபெறவில்லை என்றாலும் கட்டுரை நீண்டு விட்டதாலும் முக்கியமானவற்றை கூறி விட்டேன் என்பதாலும் இத்துடன் நிறைவு செய்கின்றேன். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சித்துப் பாருங்கள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #@அமானுஷ்யம்@( HORROR )
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - Tired of Banks Controlling Your Money? Start Your Own Community Trust! Community Trust Form a BANK BG More  No Bank Fees Bring everyone together. Grow Wealth Locally Be Financially Independent COMMUNITY TRUST] Pool Resources in Gold & Silver Invest in real assets Take Control of Your Future, Together! Share the Profits Receive dividends together @nellai selvakumaran Tired of Banks Controlling Your Money? Start Your Own Community Trust! Community Trust Form a BANK BG More  No Bank Fees Bring everyone together. Grow Wealth Locally Be Financially Independent COMMUNITY TRUST] Pool Resources in Gold & Silver Invest in real assets Take Control of Your Future, Together! Share the Profits Receive dividends together @nellai selvakumaran - ShareChat