ShareChat
click to see wallet page
search
🔥 விழுந்தவன் இல்லை… எழுந்தவன் 🔥 ஒரு இளைஞன் பல தோல்விகளை சந்தித்து மனம் உடைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் இருந்த ஒரு முதியவரை பார்த்து புலம்பினான்: “தாத்தா… எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதை தொடங்கினாலும் நிலைக்கவில்லை. நான் முயற்சி செய்கிறேன்… ஆனா வெற்றி மட்டும் என்னை தவிர்க்கிறது.” முதியவர் மெதுவாக சிரித்தார். “தம்பி… இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெற்றி. ஆனா எல்லாரும் ஒரே பாதையில் நடக்கிறார்கள். அதனால்தான் குழப்பம்.” இளைஞன் அமைதியாகக் கேட்டான். முதியவர் தொடர்ந்தார்: “எல்லாரும் செய்கிறார்கள் என்று நீயும் அந்த பாதையில் போகக்கூடாது. அது உனக்கான பாதை என்றால் — அதில் உன் முயற்சி, உழைப்பு, பயிற்சி அனைத்தையும் போடு. அது உனக்கான பாதை இல்லை என்றால் — உனக்கான ஒரு பாதையை உருவாக்கு. அங்கீகாரம் அங்கே தான் கிடைக்கும்.” இளைஞன் மெதுவாக கேட்டான்: “அப்படின்னா நான் இவ்வளவு நாள் தோல்வியடைந்ததுக்கு காரணம் என்ன தாத்தா?” முதியவர் சொன்னார்: “நீ பாதையை தேர்வு செய்யாமல் பயணம் தொடங்கிட்டாய். ஒரு ஊருக்கு போகணும் என்றால் முதலில் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்போ தான் எப்படி போவது என்று திட்டமிட முடியும். நாம் எங்கு செல்ல வேண்டும் என்று பாதை தெரியாமல் நமக்கான இடத்திற்கு செல்ல முடியாது ஆனால் எங்கு செல்ல வேண்டுமென்று தெரியவில்லை என்றால் பாதையில் நீ நடக்கலாம்… ஆனால் எங்கும் சென்று சேர மாட்டாய்.” சிறிது நேரம் அமைதி. “தம்பி… நீ தோல்வியடைந்தவன் இல்லை. நீ இன்னும் உனக்கான திசையை தேர்வு செய்யாதவன். திசை தெளிவானால் வெற்றி கண்டிப்பாக வரும்… இளைஞனின் கண்களில் ஒரு தெளிவு. ஆனால் இந்த முறை அது சோர்வின் மனநிலை இல்லை அது ஒரு உற்சாகத்தின் மனநிலை . இப்போது அவனுக்கு தெளிவு கிடைத்தது . அவன் அவன் பாதையை நோக்கி எழுந்தான். அவன் தோல்வியால் விழுந்தவன் அல்ல. அவன் உணர்வால் எழுந்தவன். 🎯 கதையின் முடிவு: விழுவது பிரச்சனை இல்லை. இங்கு பலர் விழுந்தே இருப்பது தான் பிரச்சனை. எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்தால் தான் நமது பயணம் மெதுவாக இருந்தாலும் வெற்றியை அடையலாம். 🔥 இவன் #😔தனிமை வாழ்க்கை 😓 #👉வாழ்க்கை பாடங்கள் #👍உன்னால் முடியும் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #💪 தன்னம்பிக்கை விழுந்தவன் இல்லை… திசை தெரிந்து மீண்டும் எழுந்தவன்.
😔தனிமை வாழ்க்கை 😓 - ShareChat