ShareChat
click to see wallet page
search
பள்ளிக்கூடமா? போர்க்களமா? திருநெல்வேலி திம்மராஜபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தேர்தல் பணிக்காகத் தயார் செய்தபோது, அங்கிருந்து துப்பாக்கித் தோட்டா கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தோட்டா பழைய ரகத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடியது என வரும் தகவல்கள், தமிழகத்தில் ஆயுதப் புழக்கம் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒரு கல்வி நிறுவனத்தில் தோட்டா கண்டெடுக்கப்படுவது மாநிலப் பாதுகாப்பிற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். ஏற்கனவே தமிழகத்தின் பல கல்விக்கூடங்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவரும் நிலையில், தற்போது 'தோட்டாக்கூடங்களாகவும்' மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. பழைய ரக ஆயுதங்கள் இன்னும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவை பள்ளிக் கட்டிடங்களில் கண்டெடுக்கப்படுவதும் உளவுத்துறையின் மெத்தனத்தையே பறைசாற்றுகிறது. மாணவர்கள் அச்சமின்றிப் பயில வேண்டிய இடத்தில், ஆயுதப் புழக்கம் இருப்பது தமிழகத்தின் வருங்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தன் ஆட்சியை 'சூப்பர்ஃபாஸ்ட் எஞ்சின்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் லட்சணத்தைப் பார்த்தால், மக்கள் இந்த ஆட்சியை 'சூப்பர்வேஸ்ட் எஞ்சின்' என்றுதான் அழைக்கின்றனர். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, குற்றவாளிகளை ஒடுக்குவதை விட்டுவிட்டு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சி, மக்களின் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்துவிட்டது. விளம்பர அரசியலை விடுத்து, பள்ளிக்கூடங்களிலும் மக்கள் நடமாடும் பகுதிகளிலும் ஆயுதப் புழக்கத்தைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat