#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 உருவம் ஸ்ரீ ராமர்: ராம நாமத்தின் மகத்தான மகிமைகள்!*
ஸ்ரீ ராமரின் அவதார நோக்கமே ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படி அறநெறிகளுடன் வாழவேண்டும் என்பதைக் காட்டுவதுதான். அவரது மகத்தான மகிமையில் முக்கியமானவைகள் இதோ:
மரியாதை புருஷோத்தமன்:
ராமர் ஒரு மனிதனாக பிறந்து மனித எல்லைக்கு உட்பட்ட கஷ்டங்களை அனுபவித்தவர். ஒரு மனிதன் எப்படி தர்மத்தை மீறாமல் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்ததால் அவர் மரியாதை புருஷோத்தமன் என்று போற்றப்படுகிறார்.
ஏகபத்தினி விரதன்:
அக்கால அரசர்கள் பல திருமணங்கள் செய்துகொண்ட நிலையில் வாழ்க்கையில் ஒரே ஒருத்திதான் தன் மனைவி என சீதையின் மீது மாறாத அன்பு கொண்டவர். இன்றும் ஒரு சிறந்த கணவனுக்கு ராமரே முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
பித்ரு வாக்கிய பரிபாலனம்:
தந்தை கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடிசூட வேண்டிய தருணத்தில் எவ்வித மறுப்பும் இன்றி 14 ஆண்டுகள் வனவாசம் சென்றவர். தந்தையின் சொல்லுக்கு அவர் கொடுத்த மதிப்பு மிக உயர்ந்தது.
சரணாகதி வத்சலன்: (அடைக்கலம் தருபவர்)
தன்னை நம்பி வருபவர் யாராக இருந்தாலும் (பகைவன் இராவணனின் தம்பி விபீஷணனாக இருந்தாலும் மறுக்காமல் அடைக்கலாம் தருவதே ராமரின் பெருமை. "சரணடைந்தவரை காப்பது என் கடமை" என்பதே அவர் கொள்கை.
சமத்துவப் பண்பான நட்பு:
ராமாயணத்தில் சாதி, இனம் கடந்து அனைவரையும் சகோதரர்களாக ஏற்றவர் ராமர். வேடர் குல குகன், குரங்கு குலசுக்ரீவன், அசுர குல விபீஷணன்ஆகியோரை தனது தம்பிகளாகவே ஏற்றுக்கொண்டார்.
கருணை உள்ளம்: (சபரி மற்றும் ஜடாயு)
முதியவளான சபரி அளித்த எச்சில் பழங்களை (சுவைத்து இனிப்பானதை மட்டும் கொடுத்தது) அன்புடன் ஏற்றதும், சீதையை காக்க போராடி வீழ்ந்த ஜடாயு என்ற பறவைக்கு தந்தைக்கு அடுத்த நிலையில் இறுதி சடங்குகளை செய்ததும் ராமரின் எல்லையற்ற கருணையைக் காட்டுகிறது.
ஆஞ்சநேயரின் பக்தி:
இராமரின் மகிமையை உலகிற்கு பறைசாற்றியவர் அனுமன். ராம நாமம் சொல்லும் இடத்தில் எல்லாம் அனுமன் வீற்றிருப்பார் என்பார்கள். அனுமனை தன் ஆத்ம நண்பராகவும் , சிறந்த சேவகன் ஆகவும் உயர்த்திப் பிடித்தவர் ராமர்.
அகலிகை சாப விமோசனம்: கல்லாகக் கிடந்த அவலிகையைத் தனது கால் தூசி பட்டு மீண்டும் பெண்ணாக மாற்றினார். இது ராமனின் பாதங்கள் மற்றும் அவர் கொண்ட கருணையின் ஆற்றலை காட்டுகிறது.
ராம ராஜ்ஜியம்;
மக்களின் கருத்திற்கு மதிப்பு கொடுத்து நீதியையும், நேர்மையையும் மட்டுமே அடிப்படையாகக்கொண்டு அவர் நடத்திய ஆட்சி, இன்றும் உலகின் மிகச்சிறந்த ஆட்சி முறைக்கு (Ideal state) உதாரணமாகக் கருதப்படுகிறது.
வீரம் மற்றும் அடக்கம்:
சிவன் வில்லை உடைத்தது முதல், மாரீசன், ராவணன் போன்ற கொடிய அரக்கர்களை அழித்ததுவரை அவரது வீரம் ஈடு இணையற்றது. கடலையே வற்ற செய்யும் வலிமை இருந்தும் வருண பகவானிடம் மூன்று நாட்கள் தவம் இருந்து அனுமதி கேட்டார் .வலிமை இருந்தும் பணிவோடும், பொறுமையோடும் செயல்படுவது ராமரின் மகிமை.
ராம நாமத்தின் மகிமை:
"ராம" என்ற இரண்டெழுத்து மந்திரம்' தாரக மந்திரம்' எனப்படுகிறது. அனுமன் முதல் சாதாரண அணில் வரை இந்த நாமத்தைச் சொல்லி அசாத்தியமான காரியங்களை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி அவர் வாழ்ந்த காலத்தைவிட இன்றும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ராம நாமம் தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருப்பதே அவரது மிகப்பெரிய மகிமை.:
எதிரியிடமும் காட்டிய அன்பு:
யுத்த களத்தில் ஆயுதம் இன்றி நின்ற ராவணனைப் பார்த்து "இன்று போய் நாளை வா "என்று கூறி திருந்த வாய்ப்பளித்தவர். எதிரியைக் கூட தர்மத்தின் வழியிலேயே அணுகுவது ராமரின் குணம்.
"ராமோ விக்ரஹவான் தர்ம:"- ராமர் என்றால் தர்மத்தின் உருவம் என்று பொருள்.
இன்னும் ஏராளமாக ஸ்ரீ ராமரின் மகிமை மற்றும் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம். அப்படி கூறிக் கூறியே நாமும் பல புண்ணியங்களை பெறலாம். பெறுவோமாக!🌹


