#🙏🏼சங்கடஹரா சதுர்த்தி💫 🌹இன்று 06.03.2026
🚩சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி.
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக தான் விநாயகப் பெருமான் திகழ்கிறார்.
அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக தான் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதி திகழ்கிறது. அதனால் தான் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று நாம் கூறுகிறோம்.
அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி வெள்ளிக்கிழமை அன்று வரும் பொழுது பணம் தொடர்பான அனைத்து விதமான சங்கடங்களையும் தீர்த்து வைப்பார் விநாயகர் பெருமான்.
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தடைகளையும் கஷ்டங்களையும் நீக்கக்கூடிய வல்லமை படைத்த தெய்வமாக திகழக் கூடியவர் தான் விநாயகர் பெருமான்.
விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதி எந்த கிழமையில் வருகிறதோ அதை பொறுத்து நம்முடைய வேண்டுத லை நாம் முன் வைக்கும் பொழுது அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை, அதாவது சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக் கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தி வருவது நம்முடைய பண கஷ்டத்தை நீக்க கூடியதாகவே திகழும்.
மார்ச் மாதம் 6ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தி வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் நாம் எப்பொழுதும் போல் விநாயகரை ஆலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டிலேயே வழிபாடு செய்து விட்டு இந்த ஒரு பரிகாரத்தை கூடுதலாக செய்யும் பொழுது பணம் தொடர்பான கஷ்டங்கள் தீர்வதற்குரிய வழியையும், சுக்கிர பகவானின் அருளையும் பெற முடியும்.
வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது மதியம் 1 மணி யிலிருந்து 2 மணிக்குள்ளோ அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளோ இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வரக்கூடிய 8 மணியிலிருந்து 9 மணி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
சுக்கிர பகவானுக்குரிய தானியமாக திகழ்வது வெள்ளை மொச்சை. பொது வாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெள்ளை மொச்சையை தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்யும் பொழுது சுக்கிரனின் அருளை பெற முடியும்.
அந்த வகையில் தான் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றும் நாம் வெள்ளை மொச்சையை பயன்படுத்த வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்திலோ அல்லது புதிதாக வாங்கிய அகல் விளக்கிலோ வெள்ளை மொச்சையை முழுமையாக நிரப்பிக் கொள்ளுங்கள்.
அதற்கு மேல் கிழங்கு மஞ்சள் ஒன்றை வைக்க வேண்டும். இந்த மஞ்சளை பிள்ளையார் பிடித்து வைப்பது போல் நேராக மொச்சையின் மேல் வைத்து அந்த மஞ்சள் கிழங்கை பிள்ளையாராக பாவித்து அதற்கு குங்குமம் வைக்க வேண்டும்.
இதை விநாயகப் பெருமானின் படத்திற் கு முன்பாக வைத்து விட்டு தீபத்தை ஏற்றி வைத்து பிறகு மலர்களாலும் அருக ம் புல்லாலும் விநாயகரின் போற்றிகளை கூறி அந்த மஞ்சள் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது விநாயகப் பெருமானுக்குபிடித்தமான இனிப்பு பொருட்களை நெய்வேத்தியமா க வைத்து செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
வெள்ளை மொச்சை மற்றும் கிழங்கு மஞ்சளை காலையிலேயே விநாயகரின் பாதத்திற்கு முன்பாக வைத்து விடுங்க ள். வழிபாட்டை இரவு 8 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்து கொள்ளலாம். இந்த மொச்சையும் கிழங்கு மஞ்சள் முழுவதும் விநாயகரின் பாதத்திலேயே இருக்கட்டும்.
மறுநாள் காலையில் கிழங்கு மஞ்சளை விநாயகரின் பாதத்தில் வைத்து விட்டு மொச்சையை பறவைகளுக்கு தானமாக போட்டு விட வேண்டும். இப்படி நாம் விநாயகர் பெருமானை வெள்ளிக் கிழமையில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய பணம் தொடர்பான கஷ்டங்களும் சங்கடங்களும் தீரும்.
விநாயகப் பெருமானின் அருளையும் சுக்கிர பகவானின் அருளையும் ஒரு சேர பெறுவதற்குரிய ஒரு அற்புதமான வழிபாடாக தான் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி வழிபாடு திகழ்கிறது. இந்த வழிபாட்டை முழுமை யாக பயன்படுத்தி பண கஷ்டத்தை தீர்ப்பதற்குரிய வழியை பெறலாம்.
🌹விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி...
🌹06.03.2026... நேசமுடன் விஜயராகவன். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔍ஜோதிட உலகம் 🌍


