ஜனாஸா தொழுகையில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதுதல்.
“குழந்தைக்கு ஜனாஸா தொழுகை தொழும்போது, ‘ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதுவதுடன், “அல்லாஹும்மஜ்அல்ஹு லனா ஃபரத்தவ் வ ஸலஃபவ் வ அஜ்ரா” இறைவா, இக்குழந்தையை நன்மைக்கான சேமிப்பாகவும் முன் வைப்பாகவும் நற்பலனாகவும் ஆக்குவாயாக! என்றும் கூற வேண்டும்” என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை சத்தமாக ஓதினார்கள். பிறகு “நீங்கள் இது ஒரு நபிவழி என்பதை அறிந்து கொள்வதற்காகவே சத்தமிட்டு ஓதினேன்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(புகாரி: 1335)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


