ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (21.01.2026)* ……………………………………………................................ *‘’உங்களை நம்புங்கள்...!"* ........................................................... நம்மைப்பற்றி நாமே தாழ்வாக நினைப்பது, நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்... அப்பொழுதுதான் நாம் எடுத்த செயலை வெற்றியடைய வைக்கமுடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, நமது எதிரிகள் கூட நம்மை வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்... இந்த எண்ணம்தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும்!, உயர உயரப் பறந்து செல்லும் பறவைகளைப் போல, நாமும் வாழ்க்கை என்ற வான்வெளியில் உயர்ந்து கொண்டே செல்லலாம்... மாவீரன் நெப்போலியனுக்கு, அவருடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத் தட்டி இசை எழுப்பி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைச் கூறிக்கொண்டு இருந்தார்கள்... அதனைத் தொடர்ந்து நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளை தளபதிகள் செய்திருந்தார்கள். நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது... அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்த பின்பு, குண்டு வெடித்தது. தளபதிகளின் கைகளிலிருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன... ஆனால்!, நெப்போலியன் கை மட்டும் சிறிதும் நடுங்கவில்லை. அவர் கையிலிருந்த கிண்ணத்தில் பழரசம்கூட ததும்பவில்லை... இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்... “பிரபுவே! இது நாங்கள் செய்த ஏற்பாடுதான்!, இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக் கிண்ணங்களை தவற விட்டுவிட்டோம். ஆனால்!, உங்களுடைய கை சற்றும் நடுங்கவில்லை. எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று வியந்து பாராட்டினார்கள்... உடனே நெப்போலியன் சொன்னார். “அதனால்தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள்” என்றார்... உண்மைதான்!, நெப்போலியனுக்கு தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தது. அத்துடன் எதிலும் ஏமாந்து போகாத விழிப்புணர்வு அதிகமாக இருந்தது... நெப்போலியனின் மாபெரும் வெற்றிகளுக்கு இவைகள்தான் காரணம், ஒவ்வொரு கணமும் நெப்போலியன் தன்னை மிகவும் நம்பினார்... *ஆம் நண்பர்களே...!* 🔴 *தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் கூறுகிறோம், இவைகளையெல்லாம் வெறுமனே பின்பற்ற முடியாது...!* ⚫ *தன்னம்பிக்கை இருந்தால்தான் அவையெல்லாம் கைகூடும். எனவே!, எல்லாவற்றுக்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். நம்புங்கள் நம்மால் முடியும்...!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
innraya SINTHANAY - தன்னம்பிக்கையை வளர்த்துவாழ்க்கை சவால்களை எதிர் கொள்ளுங்கள் சாதனை மீது படையுங்கள். உங்கள் முழு நம்பிக்கை வைத்து செயலில் இறங்குங்கள்" தன்னம்பிக்கையை வளர்த்துவாழ்க்கை சவால்களை எதிர் கொள்ளுங்கள் சாதனை மீது படையுங்கள். உங்கள் முழு நம்பிக்கை வைத்து செயலில் இறங்குங்கள்" - ShareChat