ShareChat
click to see wallet page
search
குளச்சல் நகராட்சி குப்பை வண்டி மோதி காவலாளி உயிரிழப்பு குளச்சல் பகுதியைச் சேர்ந்த கபீர் (66) என்பவர், தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி, பணியில் இருந்தபோது குப்பைகளைச் சேகரிக்க வந்த நகராட்சி குப்பை வண்டி அவர் மீது மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நசீமா அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் குப்பை வண்டி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat