ShareChat
click to see wallet page
search
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 72 வது  திருத்தலம் திருக்குடந்தைக்காரோணம் அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர் மரம் வில்வம் மகாமகததீர்த்தம் பாடல் எண் : 7 பண் : தக்கேசி ஊனார் தலைகை ஏந்தி உலகம் பலிதேர்ந்து உழல் வாழ்க்கை மானார் தோலார் புலியின் உடையார் கரியின் உரிபோர்வை தேனார் மொழியார் திளைத்து ஆடி திகழும் குடமூக்கில் கானார் நட்ட உடையார் செல்வக் காரோணத்தாரே பொழிப்புரை: விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்று உழலும் வாழ்க்கையர், மான் தோலைப் பூணநூலில் அணிந்தவர். தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து சுடுகாட்டில் நடனம் புரிபவர். குறிப்புரை: கபாலம் ஏந்திப் பலி ஏற்று உழலும் இறைவன் காரோ ணத்தார் என்கின்றது. மானார் தோலார் - மான்தோலை உடையவர். கரியின் உரிபோர்வை - யானைத்தோலால் ஆகிய போர்வையை உடையவர். திளைத்து - கூடி. தேனார் மொழியாள்என்பது இத்தலத்து அம்மையின் திருநாமம். #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
🙏கோவில் - ShareChat