குமாரகோவில் ஜங்சன் அருகே விபத்து - இருசக்கர வாகனத்தில் வந்த பெண் படுகாயம்
* கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் ஜங்சன் அருகே உள்ள ஜயங்கார் கேக் ஷாப் பகுதியில் இன்று வாகன விபத்து ஏற்பட்டது.
* ரோகிணி கல்லூரி வாகனம், பொலேரோ கார் மற்றும் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதாக கூறப்படுகிறது.
* இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மல்லிகா (62) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகிலுள்ள முத்து நியூரோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
* இதில் பொலேரோ கார் ஓட்டுநருக்கும் காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மேல்சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
* விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் தக்கலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


